follow the truth

follow the truth

April, 18, 2025
HomeTOP2பங்களாதேஷுக்கு மோடியிடமிருந்து வாழ்த்து

பங்களாதேஷுக்கு மோடியிடமிருந்து வாழ்த்து

Published on

பங்களாதேஷின் இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் பொறுப்பேற்றுள்ளதால் இந்தியா மகிழ்ச்சி அடைவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷை விரைவாக மீட்டெடுப்பதும் இந்து சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்வதும் முக்கியம் என இந்தியப் பிரதமர் வலியுறுத்தியதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்தியப் பிரதமர் தனது எக்ஸ் கணக்கில் ஒரு குறிப்பையும் இட்டுள்ளார்.

மேலும், அமைதி, பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்கான இரு தரப்பினரின் பொதுவான அபிலாஷைகளை நிறைவேற்ற பங்களாதேஷுடன் இணைந்து பணியாற்ற இந்தியா உறுதிபூண்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா இராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறினார், அரசாங்கம் கவிழ்ந்தது, ஜனாதிபதி முகமது ஷஹாபுதீன் நாட்டின் பாராளுமன்றத்தை கலைக்க வேண்டியிருந்தது.

வந்த இராணுவ ஆட்சியை நிராகரித்த போராட்டக்காரர்களின் கோரிக்கைக்கு இணங்க முஹம்மது யூனுஸுக்கு இந்த பதவி கிடைத்தது.

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற யூனுஸ், பங்களாதேஷ் பொருளாதார நிபுணரும் சமூக தொழில்முனைவோரும் ஆவார், அவர் ஹசீனாவின் தீவிர எதிர்ப்பாளராக இருந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பங்களாதேஷில் புதிய அரசு அமையும் வரை முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அந்நாட்டை ஆட்சி செய்ய உள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

AI இயந்திர பொலிஸ் அதிகாரியை அறிமுகப்படுத்திய தாய்லாந்து

தாய்லாந்துப் புத்தாண்டுத் திருவிழாவை முன்னிட்டு தாய்லாந்து பொலிஸ் முதன்முறையாக   தனது முதலாவது செயற்கை நுண்ணறிவு (AI) இயந்திர பொலிஸ்...

புத்தாண்டு காலத்தில் பஸ் சேவைகள் குறித்து இதுவரை 187 முறைபாடுகள்

சித்திரை புத்தாண்டு காலத்தில் முன்னெடுக்கப்பட்ட பஸ் சேவைகள் குறித்து பயணிகளிடமிருந்து 187 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு...

தேர்தல் தொடர்பில் இதுவரை 176 முறைப்பாடுகள் பதிவு

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை (மார்ச் மாதம் 03 ஆம் திகதி முதல்...