follow the truth

follow the truth

September, 19, 2024
HomeTOP2நாமலுக்கு மஹிந்தவும் பசிலும் மட்டுமாம் ஆதரவு

நாமலுக்கு மஹிந்தவும் பசிலும் மட்டுமாம் ஆதரவு

Published on

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை நியமிக்கும் நிகழ்வில் ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் பலர் கலந்து கொள்ளாதது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவைத் தவிர, ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த வேறு எவரும் கலந்து கொள்ளவில்லை.

இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் சசீந்திர ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷவின் சகோதரர்களான யோஷித ராஜபக்ஷ, ரோஹித ராஜபக்ஷ மற்றும் அவரது தாயார் ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.

ஜனாதிபதி வேட்பாளரை கட்சி முன்னிறுத்துவது தொடர்பாக ராஜபக்ஷ குடும்பத்தில் கடும் கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகின.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்காளர் அட்டைகளை விநியோகிக்காமல் வைத்திருந்த தபால் உத்தியோகத்தர் பணி நீக்கம்

148 உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை உரிமையாளர்களுக்கு வழங்கப்படாத சம்பவம் தொடர்பில் தபால் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. புத்தளம் பகுதியிலுள்ள வர்த்தக...

02 நாட்களுக்கு மதுபான சாலைகளை மூட தீர்மானம்

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாக கலால்...

வாக்குச் சீட்டுக்களை புகைப்படம் – வீடியோ எடுத்தல் தடை

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் அன்று வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்களிக்கும் சந்தர்ப்பங்களையும் அடையாளமிடப்பட்ட வாக்குச் சீட்டுக்களையும் நிழற்படமெடுத்தல் மற்றும் வீடியோ...