follow the truth

follow the truth

September, 29, 2024
Homeஉள்நாடுஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து- 13 ஆயிரத்து 832 மீனவர்களுக்கு இழப்பீடு

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து- 13 ஆயிரத்து 832 மீனவர்களுக்கு இழப்பீடு

Published on

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட, 13 ஆயிரத்து 832 மீனவர்களுக்கு, முதற்கட்டமாக இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 2022 ஆம் ஆண்டுக்கான கடற்றொழில் அமைச்சின் மீதான வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு, கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கொழும்பில் 2 ஆயிரத்து 956 மீனவர்களுக்கும், கம்பஹா மாவட்டத்தில் 10 ஆயிரத்து 175 மீனவர்களுக்கும் மற்றும் களுத்துறையில் 701 மீனவர்களுக்கும் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், முதற்கட்ட இழப்பீடுத் தொகை வழங்கப்படாத 1, 200 மீனவர்களின் தகவல் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்களுக்கும் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என காஞ்சன விஜேசேகர உறுதியளித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடவு எண்ணை (OTP) எக்காரணம் கொண்டும் யாரிடமும் பகிர வேண்டாம்

வங்கிகளால் ஒருமுறை மட்டும் வழங்கப்படும் கடவு எண்ணை (OTP) எக்காரணம் கொண்டும் யாரிடமும் பகிர வேண்டாம் என பொலிஸார்,...

சந்தையில் தற்போது நாட்டு அரிசிக்குப் தட்டுப்பாடு

சந்தையில் தற்போது நாட்டு அரிசிக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், இந்த நிலைமையானது பாரியளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களினால் ஏற்படுத்தப்படுவதாகவும் சிறிய...

கடற்றொழிலாளர்களை கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

நாட்டின் தென்கிழக்கு கடற் பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கடற்றொழிலாளர்களை கடலுக்குச் செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல்...