பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் குடும்பத்தாருக்கு ஒரு இலட்சம் அமெரிக்க டொலர் இழப்பீடு வழங்கவும் அவரின் சம்பளத்தை மாதாந்தம் வழங்கவும் பாகிஸ்தான் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
பாகிஸ்தான் சியால்கோட்டிலுள்ள தொழிற்சாலை ஒன்றில் பொது முகாமையாளராக கடமையாற்றிய பிரியந்த குமார , கடந்த 3 ஆம் திகதி கொடூரமான முறையில் தாக்கி எரியூட்டி கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை தொடர்பில் இதுவரை நூற்றுக்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.