சவூதி அரேபியாவில் நடக்கவிருக்கின்ற மன்னர் அப்துல் அஸீஸ் சர்வதேச புனித அல்-குர்ஆன் மனனப் போட்டியில் இலங்கையைச் சேரந்த இளம் ஹாபிழ் அப்துல் ரவூப் முஹம்மத் ஷிபாக் கலந்துகொள்ளவுள்ளார்.
இளம் ஹாபிழ் அப்துல் ரவூப் முஹம்மத் ஷிபாக் அவர்களை இன்று இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானி சந்தித்துள்ளார்.
இச் சந்திப்பின் போது, போட்டியில் கலந்து கொள்ள அவர் பரிந்துரைக்கப்பட்டதற்கும், அவர் வெற்றி பெறவும் தூதுவர் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்