follow the truth

follow the truth

April, 19, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாபொஹட்டுவ வேறு வேட்பாளரை கொண்டு வருவது நாட்டுக்கு நல்ல செய்தி

பொஹட்டுவ வேறு வேட்பாளரை கொண்டு வருவது நாட்டுக்கு நல்ல செய்தி

Published on

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தனி வேட்பாளரை முன்வைக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எடுத்த தீர்மானம் நாட்டுக்கு மகிழ்ச்சியான செய்தி என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்திருந்தார்.

இதன்படி, இணைந்து வேட்பாளரை முன்வைத்து நாட்டை வங்குரோத்து செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள குழுவின் ஊடாக நாட்டு மக்கள் சரியான தீர்மானங்களை எடுக்கும் திறனைப் பெறுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தனது மற்றும் கட்சியின் கருத்து அடுத்தவாரம் அறிவிக்கப்படும் எனவும், ராஜபக்சக்களுடன் இணைந்துள்ள எந்தவொரு முகாமுக்கும் தனது மற்றும் கட்சியின் ஆதரவைப் பெற முடியாது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

அத்துடன், தற்போதைய ஜனாதிபதி சுயேட்சையாக போட்டியிட்டாலும் அவருக்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது அவரை ஜனாதிபதியாக வைத்திருக்கும் நபர்களை பொறுத்தே தீர்மானிக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இனவாதத்தினை தோற்கடிக்க புதிய சட்டங்களையாவது உருவாக்க தயங்க மாட்டோம் – ஜனாதிபதி

இனவாதத்தை தோற்கடிக்க தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லாவிட்டால், புதிய சட்டங்கள் வகுக்கப்பட்டேனும் நாட்டில் இனவாத அரசியலுக்கு இடமளிக்கப்படாது என்று...

ஜனாதிபதியின் உரையினை விமர்சிக்க எவனுக்கும் உரிமையில்லை – பிமல் ரத்நாயக்க

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் உரையை விமர்சிக்க தமிழ் மக்களை ஏமாற்றிய தமிழ்க் கட்சிகளுக்கு எந்த உரிமையும் கிடையாது...

கணக்காய்வாளர் நாயகம் பதவி யாருக்கு?

கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு பொருத்தமான வேட்பாளரை நியமிப்பதற்காக அரசியலமைப்பு சபை எதிர்வரும் 22 ஆம் திகதி கூடவுள்ளதாக நாடாளுமன்ற...