follow the truth

follow the truth

September, 19, 2024
Homeஉள்நாடுபாகிஸ்தானில் இலங்கையர் கொலை - ஜம்இய்யத்துல் உலமா கண்டனம்

பாகிஸ்தானில் இலங்கையர் கொலை – ஜம்இய்யத்துல் உலமா கண்டனம்

Published on

பாகிஸ்தானின் சியால்கோட்டில் இலங்கையர் ஒருவரை மனிதாபிமானமற்ற முறையில் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்துள்ளது.

இந்த கொடூரக் கொலைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மதத்தின் பெயரால் இழைக்கப்பட்ட இந்த காட்டுமிராண்டித்தனமான செயல் இஸ்லாத்தின் போதனைகளுக்கு முற்றிலும் முரணானது எனவும் இந்த செயலை மன்னிக்க முடியாது எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உலகளாவிய மக்கள் அனைவரும் சட்டத்தை மதித்து, சமூகங்களுக்கிடையில் நிலையான சகோதரத்துவத்தை கட்டியெழுப்புவதற்கு மனிதாபிமானத்துடன் செயற்பட வேண்டும் என்பதும் எமது எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த முன் மாதிரிகளை விட்டுச் செல்ல வேண்டும் என்பதுமே எமது எதிர்ப்பார்பாகும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச்செயலாளர் அஷ்ஷேக் அர்கம் நூரமித் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கெடுப்பு, வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் செய்யக்கூடாதவை

வாக்கெடுப்பு நிலையங்களுக்குள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் தடை விதிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் முக்கிய அறிவித்தல் ஒன்று...

விசேட தேவையுடையவர்களுக்கு வாக்களிப்பு நிலையங்களில் சிறப்பு ஏற்பாடுகள்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் விசேட தேவையுடையவர்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ...

வாக்களிக்கச் செல்பவர்களுக்காக விசேட பஸ் சேவை

ஜனாதிபதித் தேர்தலுக்கு வாக்களிக்கச் செல்லும் பயணிகளுக்காக இலங்கை போக்குவரத்துச் சபை விசேட பஸ் சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது. வாக்களிப்பதற்காக கிராமங்களுக்குச்...