பாகிஸ்தானின் சியால்கோட்டில் இலங்கையர் ஒருவரை மனிதாபிமானமற்ற முறையில் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்துள்ளது.
இந்த கொடூரக் கொலைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மதத்தின் பெயரால் இழைக்கப்பட்ட இந்த காட்டுமிராண்டித்தனமான செயல் இஸ்லாத்தின் போதனைகளுக்கு முற்றிலும் முரணானது எனவும் இந்த செயலை மன்னிக்க முடியாது எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உலகளாவிய மக்கள் அனைவரும் சட்டத்தை மதித்து, சமூகங்களுக்கிடையில் நிலையான சகோதரத்துவத்தை கட்டியெழுப்புவதற்கு மனிதாபிமானத்துடன் செயற்பட வேண்டும் என்பதும் எமது எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த முன் மாதிரிகளை விட்டுச் செல்ல வேண்டும் என்பதுமே எமது எதிர்ப்பார்பாகும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச்செயலாளர் அஷ்ஷேக் அர்கம் நூரமித் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.