follow the truth

follow the truth

March, 20, 2025
Homeஉள்நாடுபாகிஸ்தானில் இலங்கையர் கொலை - ஜம்இய்யத்துல் உலமா கண்டனம்

பாகிஸ்தானில் இலங்கையர் கொலை – ஜம்இய்யத்துல் உலமா கண்டனம்

Published on

பாகிஸ்தானின் சியால்கோட்டில் இலங்கையர் ஒருவரை மனிதாபிமானமற்ற முறையில் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்துள்ளது.

இந்த கொடூரக் கொலைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மதத்தின் பெயரால் இழைக்கப்பட்ட இந்த காட்டுமிராண்டித்தனமான செயல் இஸ்லாத்தின் போதனைகளுக்கு முற்றிலும் முரணானது எனவும் இந்த செயலை மன்னிக்க முடியாது எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உலகளாவிய மக்கள் அனைவரும் சட்டத்தை மதித்து, சமூகங்களுக்கிடையில் நிலையான சகோதரத்துவத்தை கட்டியெழுப்புவதற்கு மனிதாபிமானத்துடன் செயற்பட வேண்டும் என்பதும் எமது எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த முன் மாதிரிகளை விட்டுச் செல்ல வேண்டும் என்பதுமே எமது எதிர்ப்பார்பாகும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச்செயலாளர் அஷ்ஷேக் அர்கம் நூரமித் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்த ஆண்டில் சுகாதார அமைச்சு புதிய கட்டிடத்திற்கு மாற்றம்

கொழும்பில் உள்ள காசல் தெருவில் அமைந்துள்ள மகளிர் மருத்துவமனைக்கு அருகில் நிர்மாணிக்கபட்டுவரும் சுகாதார அமைச்சின் 16 மாடி அலுவலக...

ஜனாதிபதிக்கும் விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்திற்கும் இடையில் கலந்துரையாடல்

இந்த வருட வரவு செலவுத் திட்டம் தரவுகளின் அடிப்படையில் அறிவியல் ரீதியாகவும் திட்டமிடப்பட்ட முறையிலும் செயல்படுத்தப்படும் வரவு செலவுத்...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி நாளை அறிவிக்கப்படும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி நாளை அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும்...