follow the truth

follow the truth

September, 17, 2024
HomeTOP2ராஜபக்ஷ குடும்பத்தின் பிரமுகர் ஒருவர் விரைவில் ரணிலின் மேடையில் சேருவார்..

ராஜபக்ஷ குடும்பத்தின் பிரமுகர் ஒருவர் விரைவில் ரணிலின் மேடையில் சேருவார்..

Published on

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இருப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அதன்படி நேற்று காலை வரை எண்பதுக்கும் மேற்பட்டோர் ரணிலுடன் இருப்பதாக உள்ளக வட்டாரங்கள் மூலம் தகவல் கிடைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆட்சிக்காலத்தில் 69 இலட்சம் வாக்குகளைப் பெற்ற கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைத்துச் சென்று அரசியல் பாலின மாற்றத்திற்கு உட்படுத்தினார்.

இதே நிலையை நேற்று முன்தினம் நடைபெற்ற கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்திலும் சமல் ராஜபக்சவின் மௌனக் கொள்கையே காட்டுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“அவருக்கும் ஹார்மோன் ஊசி போட்டிருக்க வேண்டும். அவர் சுறுசுறுப்பாக இல்லாமல் இருக்கலாம். ஒரு ஹார்மோன் வேலை செய்ய நேரம் எடுக்குமே…”

அதன்படி எதிர்காலத்தில் ரணில் விக்கிரமசிங்கவின் மேடையில் ராஜபக்ச ஒருவர் தோன்றினாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வளமான நாடா அல்லது வரிசை யுகமா என்பதை இந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

வளமான மற்றும் நிலையான பொருளாதாரம் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமா அல்லது நாட்டை மீண்டும் வரிசை யுகத்திற்கு தள்ளுவதா...

நேரடி வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க நாட்டில் ஸ்திரத்தன்மை அவசியம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 94 சட்டங்கள் இலங்கையை வளமான மற்றும் போட்டிமிக்க பொருளாதாரம் கொண்ட நாடாக...

மாகாண சபை தேர்தலை விரைவாக நடாத்துவோம்

வைன் ஸ்டோர்ஸ் அனுமதிப்பத்திரம், மதுபான சாலை அனுமதி பத்திரம், என்பனவற்றைப் பெற்றுக் கொண்டவர்கள் எம்மிடம் இல்லை. விசேட வரங்களையும்...