நாட்டைக் கட்டியெழுப்ப முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்குமாறு முதலில் கோரியதாகவும், அன்றைய தினம் அவர் எடுத்த சரியான தீர்மானத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
2022ம் ஆண்டு நாடு பாரிய அரசியல் மற்றும் பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்த போது, நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பை தாம் மட்டும் ஏற்கவில்லை எனவும், நாட்டை நேசிக்கும் திறமையான குழுவினர் தன்னுடன் இணைந்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அவர்கள் தமது பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்றியதை வலியுறுத்திய ஜனாதிபதி, அந்த குழுவினரால் மட்டுமே இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என நாட்டு மக்கள் நம்புவதாகவும் குறிப்பிட்டார்.