நாட்டில் நாளொன்றிற்கு ஒருமணிநேரம் மின்தடை அமுல்படுத்தப்படும் என்று இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் அறிவித்துள்ளார்.
நாளொன்றிற்கு மாலை 6 மணிமுதல் இரவு 9 மணிக்கு இடையில் இந்த மின்தடை அமுல்படுத்தப்படும்.
இந்த மின்தடை இன்றும், நாளையும் (08) அமுல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மின்சாரத்தை சிக்கனமாகவும் உரிய முகாமைத்துவத்துடனும் பயன்படுத்துமாறு மின்சக்தி அமைச்சு, மின் பாவனையாளர்களிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.