follow the truth

follow the truth

September, 17, 2024
HomeTOP2பொஹட்டுவவில் இருந்து பிரிந்து வஜிரவின் வீட்டிற்கு திரண்ட எம்பிக்களும் அமைச்சர்களும்

பொஹட்டுவவில் இருந்து பிரிந்து வஜிரவின் வீட்டிற்கு திரண்ட எம்பிக்களும் அமைச்சர்களும்

Published on

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 75 அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் நேற்று(29) ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தனவின் கொழும்பு வீட்டிற்கும் கட்சி அலுவலகத்திற்கும் சென்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தமது ஆதரவை தெரிவித்தனர்.

இந்த அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களில் பிரசன்ன ரணதுங்க, மஹிந்தானந்த அளுத்கமகே, காஞ்சன விஜேசேகர, ரமேஷ் பத்திரன, கனக ஹேரத், ஜனக வக்கம்புர, மொஹான் பிரதர்ஷன ஆகியோர் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தனர்.

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தனவுடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் பொதுஜன பெரமுனவில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவான நூற்றைந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது ஒன்றிணைந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன தனியான ஜனாதிபதி வேட்பாளரை முன்வைப்பதற்கான தீர்மானத்துடன், ஜனாதிபதிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவை தெரிவிக்கத் தயாராக உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் பயணமும் வேகமெடுக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வளமான நாடா அல்லது வரிசை யுகமா என்பதை இந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

வளமான மற்றும் நிலையான பொருளாதாரம் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமா அல்லது நாட்டை மீண்டும் வரிசை யுகத்திற்கு தள்ளுவதா...

நேரடி வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க நாட்டில் ஸ்திரத்தன்மை அவசியம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 94 சட்டங்கள் இலங்கையை வளமான மற்றும் போட்டிமிக்க பொருளாதாரம் கொண்ட நாடாக...

மாகாண சபை தேர்தலை விரைவாக நடாத்துவோம்

வைன் ஸ்டோர்ஸ் அனுமதிப்பத்திரம், மதுபான சாலை அனுமதி பத்திரம், என்பனவற்றைப் பெற்றுக் கொண்டவர்கள் எம்மிடம் இல்லை. விசேட வரங்களையும்...