follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடு2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

Published on

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே 1,773,048 – 1,925,129 வரையிலான எண்ணிக்கையாக பதிவானதாக தேசிய தாவரவியல் பூங்காத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் (திட்டமிடல்) எச்.ஜி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்களில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே 103,322 – 227,729 வரையில் காணப்பட்டதாக தெரிவித்துள்ளார். .

ஜூன் 2024 வரை தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 965,468 ஆகவும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 183,674 ஆகவும் பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் வரையிலான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது 96% அதிகரிப்பாகும்.

இதன்படி, 2022ஆம் ஆண்டு வருமானம் 420.02 மில்லியன் ரூபாவாகவும், 2023ஆம் ஆண்டு வருமானம் 901.1 மில்லியன் ரூபாவாகவும் இருந்தது. 2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம் பதிவானது.” என்று தெரிவித்தார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...