follow the truth

follow the truth

September, 8, 2024
HomeTOP2"பொலிஸ் மா அதிபர் தனது சீருடையை கழற்றிவிட்டு சிவில் உடையில் பொலிஸ் மா அதிபராக பணியாற்றுகிறார்"

“பொலிஸ் மா அதிபர் தனது சீருடையை கழற்றிவிட்டு சிவில் உடையில் பொலிஸ் மா அதிபராக பணியாற்றுகிறார்”

Published on

பொலிஸ் மா அதிபர், பாதுகாப்பு அமைச்சிற்கு உத்தியோகபூர்வ சீருடையை கழற்றி விட்டு சிவில் உடையில் வந்து செல்வாக்கு செலுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (26) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அதனை மறுத்த அரசாங்கம், அவர்கள் சீருடையுடன் அல்லது அணியாமல் பாதுகாப்பு அமைச்சுக்கு வரவில்லை என தெரிவித்துள்ளது.

சஜித் பிரேமதாச தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;

“அப்படியானால் அவர் துணி இல்லாமல் வந்தாரா என்று தெரியவில்லை. பிரதமர் வெட்கப்படுகிறார். நானும் ரோயல் மாணவன் தான். அவரும் ரோயல் மாணவன் தான். ரோயல் மாணவர்கள் கேலரியில் காத்திருக்கிறார்கள். உயர் நீதிமன்ற தீர்ப்பு செல்லாது. அரசியலமைப்பை மீறுவதற்கு எங்களில் யாருக்கும் உரிமை இல்லை. இன்று, இரண்டு அரச குடும்பத்தார் ஒன்று சேர்ந்து உயர் நீதிமன்றத் தீர்ப்பை மீறியுள்ளனர்..”

பொலிஸ் மா அதிபரின் கடமைகளை இடைநிறுத்தி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை விமர்சித்து பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (26) பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு இன்று நம்பிக்கை இல்லை

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு நம்பிக்கை இல்லை என நகர அபிவிருத்தி மற்றும்...

கவர்ச்சியான பிரச்சாரங்களால் ஆட்சிக்கு அவசரப்படுகிறார் அனுர

ஊழலை ஒழிப்பதற்கோ அல்லது மோசடியாளர்களைத் தண்டிப்பதற்கோ ஜனாதிபதி அதிகாரம்தான் தேவையென தேசிய மக்கள் சக்தி கருதக் கூடாது என...