follow the truth

follow the truth

September, 8, 2024
Homeவிளையாட்டு2024 ஒலிம்பிக் திருவிழா நாளை ஆரம்பம்

2024 ஒலிம்பிக் திருவிழா நாளை ஆரம்பம்

Published on

2024 பாரிஸ் ஒலிம்பிக் திருவிழா நாளை (26) கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது.

32 விளையாட்டுப் போட்டிகளில் 329 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படவுள்ள நிலையில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 10,500இற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் களம் காண்கின்றனர்.

இந்த 2024 -ம் ஆண்டு ஒலிம்பிக் தொடரில் மொத்தம் 206 நாடுகள் பங்கேற்க உள்ளன. அதில் ஆப்ரிக்காவில் இருந்து 54 நாடுகளும், ஐரோப்பாவில் இருந்து 48 நாடுகளும், அமெரிக்க கண்டத்தில் இருந்து 41 நாடுகளும், ஆசியாவில் இருந்து 44 நாடுகளும் பங்கேற்க உள்ளது. மேலும், மொத்தமாக 2,900 வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

இவ்வாண்டு பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு 6 இலங்கை வீர – வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ள நிலையில், ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்காக தருஷி கருணாரத்ன, அருண தர்ஷன மற்றும் நதீஸா தில்ஷானி லேக்கம்கே ஆகிய மூவரும் நேற்றிரவு(24) நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2027 ஆசியக் கிண்ண கால்பந்து போட்டி – தகுதிச் சுற்று 10ஆம் திகதி

எதிர்வரும் 10ஆம் திகதி சவூதி அரேபியாவில் நடைபெறவுள்ள 2027ஆம் ஆண்டுக்கான ஆசிய கால்பந்தாட்டக் கிண்ணத் தகுதிச் சுற்றுப் போட்டியின்...

நியூசிலாந்து அணியின் சுழல் பந்து பயிற்சியாளராக ரங்கன ஹேரத்

நியூசிலாந்து அணியின் சுழல் பந்து பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச...

கிரிக்கெட் தடை செய்யப்பட்ட இத்தாலிய நகரம்

இத்தாலியின் மோன்கோல்ஃபோன் அதிகாரிகள் அந்நகரில் கிரிக்கெட் விளையாட தடை விதித்துள்ளனர். அந்த நகரத்தில் வசிப்பவர்களில் 30% பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்களில்...