follow the truth

follow the truth

September, 8, 2024
HomeTOP2வெள்ளியன்று பாராளுமன்றம் கலைக்கப்படும் என்றும் ஒரு கதை இருக்குங்க..- நாமல்

வெள்ளியன்று பாராளுமன்றம் கலைக்கப்படும் என்றும் ஒரு கதை இருக்குங்க..- நாமல்

Published on

“பிரதமர் பதவி தொடர்பில் கட்சியுடன் இல்லாது என்னுடன் கதைத்து பலனில்லை. கட்சியாரை வேட்பாளராக நியமிக்குமா அவர்தான் வேட்பாளர்” என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

விஜேராமவில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற பொதுஜன பெரமுன கூட்டத்தின் இறுதியில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்ஷ;

“… இன்று தேர்தல் கமிட்டிகளை அமைப்பது, அலுவலகங்கள் அமைப்பது, பிரச்சாரம் செய்வது பற்றி ஆலோசித்தோம். இன்று பொஹட்டுவ வேட்பாளர் தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை. இது குறித்து அரசியல் குழுதான் தீர்மானம் எடுக்க வேண்டியிருக்கும். தேர்தல் ஆணையாளரும், தேர்தல்கள் ஆணைக்குழுவும் ஜனாதிபதித் தேர்தலை வர்த்தமானியில் வெளியிட்ட பின்னர், நாட்டுக்கு பொருத்தமான ஒரு வேட்பாளரை தெரிவு செய்ய எதிர்பார்த்துள்ளோம். நாம் தேர்ந்தெடுக்கும் வேட்பாளர், நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துபவராகவும், நமது கொள்கைகளை நடைமுறைப்படுத்துபவர்களாகவும், நமது அரசியல் முகாமை நன்கு புரிந்து கொண்டவராகவும் இருக்க வேண்டும். உருவாக்கப்படும் அரசாங்கத்தில் எமது கட்சியின் பங்கு குறித்து நாம் தீர்மானிக்க வேண்டும். நாங்கள் சுற்றித்திரிந்து அரசியல் விளையாட விரும்பவில்லை.

தற்போதைய ஜனாதிபதி பற்றி சிலர் கோடு போடுகின்றனர். அவர்கள் ஜனாதிபதியுடன் பயணம் செய்கிறார்கள். நாங்கள் தனி நபர்களாக அல்ல கட்சியாகவே முடிவுகளை எடுக்கிறோம். எனவே நாங்கள் தனிப்பட்ட கோடுகளை வரையவில்லை. ஒரு கட்சியாக நாங்கள் முடிவுகளை எடுக்கிறோம். அந்த நேரத்தில் கட்சி நமக்காக நிற்கும் என நம்புகிறோம்.

ஜனாதிபதியுடனான ஆளும் கட்சி கூட்டத்தில் நான் பங்கேற்கவில்லை. குழுக்கள் நியமிக்கப்படுகின்றன. இன்று இல்லை என்கிறார்கள். நாளை வேண்டாம் என்கிறார்கள். ஜனாதிபதி தேர்தல் வர்த்தமானி இன்று வெளியிடப்படும் நாளை வெளியிடப்படும் என்கிறார்கள். எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றம் கலைக்கப்படும் எனப் பிரசாரம் செய்யப்பட்டுள்ளது. இது போன்ற வதந்திகள் பரவி வருகின்றன. வதந்திகளை நாம் நம்பக்கூடாது. தேர்தல் ஆணையரின் கூற்றை நம்ப வேண்டும். ஜனாதிபதி தேர்தல் வரப்போகிறது. அதற்கு நாம் தயாராக வேண்டும்..”

கேள்வி – நாமல் எம்.பி., ஐக்கிய தேசியக் கட்சியின் பலமான ஒருவர் உங்களுக்குப் பிரதமர் பதவியை வழங்கப் பேசினாரா?

பதில் – பிரதமர் பதவியை வழங்குவதற்காக தனி நபரிடம் பேசி பயனில்லை. அதற்காக கட்சியுடன் பேச வேண்டும். பொஹட்டுவையில் இருந்து பிரதமர் நியமிக்கப்படுவதாயின் அது தொடர்பில் கட்சியுடன் கலந்துரையாட வேண்டும். நான் யாரையும் சந்தித்து விவாதிக்கவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன். கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதுதான் அரசியல் என்று என் தந்தை எனக்குக் கற்றுக் கொடுத்தார். அந்த கொள்கையை இன்றும் பின்பற்றுகிறேன். எனவே, பேச்சுவார்த்தை நடத்தினால், கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம். மக்களை சந்தித்து அரசியல் முடிவுகளை எடுப்பதில்லை.

கேள்வி – பிரதமர் பதவியை வழங்கினால் அதனை ஏற்க தயாரா?

பதில் – வெளியில் இருந்து வேட்பாளரை கொண்டு வந்தால் கட்சிக்கு பிரதமர் பதவி கிடைக்க வேண்டும் என நம்புகிறோம். கட்சி வேட்பாளரை முன்மொழிந்தால், கட்சியின் அரசியல் குழு அந்த முடிவுகளை எடுக்கும். அந்த முடிவுகளை தனி நபர்கள் எடுக்கக்கூடாது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு இன்று நம்பிக்கை இல்லை

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு நம்பிக்கை இல்லை என நகர அபிவிருத்தி மற்றும்...

கவர்ச்சியான பிரச்சாரங்களால் ஆட்சிக்கு அவசரப்படுகிறார் அனுர

ஊழலை ஒழிப்பதற்கோ அல்லது மோசடியாளர்களைத் தண்டிப்பதற்கோ ஜனாதிபதி அதிகாரம்தான் தேவையென தேசிய மக்கள் சக்தி கருதக் கூடாது என...