follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉள்நாடுதெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து

Published on

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (24) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மத்தலயில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறி ஒன்று முன்னால் சென்ற மற்றுமொரு லொறியுடன் மோதியதில் நெடுஞ்சாலையில் 174.2 R நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் பின்னால் சென்ற லொறியின் சாரதி, சாரதி உதவியாளர் மற்றும் முன்னால் சென்ற லொறியின் சாரதி உதவியாளர் ஆகியோர் காயமடைந்துள்ளதுடன், பின்னால் சென்ற லொறியின் சாரதி உதவியாளர் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

நுவரெலியா பகுதியைச் சேர்ந்த 35 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் தங்காலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

தெற்கு அதிவேக வீதியின் அங்குனுகொலபலஸ்ஸ சோதனைச் சாவடி மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும்...

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த...

ஜனாதிபதித் தேர்தல் – பாதுகாப்பிற்காக முப்படைகளும் இணக்கம்

ஜனாதிபதித் தேர்தலின் போது அமுல்படுத்தப்பட வேண்டிய இறுதி பாதுகாப்பு வேலைத்திட்டம் பொலிஸ்மா அதிபர்களுக்கு இன்று (19) வழங்கப்பட்டதாக பொது...