follow the truth

follow the truth

April, 17, 2025
HomeTOP2‘அஸ்வெசும’ 2ம் கட்டம் தொடர்பான கணக்கெடுப்பு ஜூலை 31 நிறைவு

‘அஸ்வெசும’ 2ம் கட்டம் தொடர்பான கணக்கெடுப்பு ஜூலை 31 நிறைவு

Published on

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டம் தொடர்பான கணக்கெடுப்பை ஜூலை 31 ஆம் திகதிக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், முதற்கட்டமாக இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கத் தவறிய குடும்பங்களுக்கு, கடந்த பெப்ரவரி மாதம் விண்ணப்பங்கள் கோரப்பட்டு, சுமார் 454,924 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

அந்த விண்ணப்பங்கள் தொடர்பான கணக்கெடுப்பு பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (22) பிற்பகல் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் கணக்கெடுப்பு நடவடிக்கையை கண்காணித்து மதிப்பீடு செய்வதற்கு கண்காணிப்பு அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் விஜேரத்ன தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளிகள், பாதிக்கப்படக்கூடியவர்கள், ஏழைகள் மற்றும் மிகவும் வறியவர்கள் ஆகிய 04 சமூகப் பிரிவுகளின் கீழ் ‘அஸ்வெசும’ நலன்புரி நலன்கள் வழங்கப்படுகின்றன. மேலும் ஊனமுற்றோர், முதியவர்கள் மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்கு வழமைபோல் வழங்கும் கொடுப்பனவுகளும் வழங்கப்படுகின்றன.

இந்த நலன்களுக்கு விண்ணப்பிக்கும் போது எப்போதும் மிகச்சரியான தகவல்களை வழங்குமாறும் நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன கேட்டுக்கொண்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் தொடர்பில் இதுவரை 176 முறைப்பாடுகள் பதிவு

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை (மார்ச் மாதம் 03 ஆம் திகதி முதல்...

திருடர்களை தங்கள் முழு பலத்தையும் பயன்படுத்திப் பிடித்தால் பொருளாதாரம் சரிந்துவிடும் – விஜித ஹேரத்

திருடர்களைப் பிடித்து மோசடி செய்பவர்களைத் தண்டிக்க முழு அரசாங்கத்தின் சுமையும் பயன்படுத்தப்பட்டால், பொருளாதாரம் வீழ்ச்சியடையும் வாய்ப்பு உள்ளது என்று...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – தபால்மூல வாக்களிப்பு திகதிகளில் மாற்றம்

எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு சில தினங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது. நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள்...