follow the truth

follow the truth

September, 6, 2024
Homeஉள்நாடுசெய்த தவறைத் திருத்தவே அரசியலமைப்புத் திருத்தம் முன்மொழியப்பட்டுள்ளது

செய்த தவறைத் திருத்தவே அரசியலமைப்புத் திருத்தம் முன்மொழியப்பட்டுள்ளது

Published on

“ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியது போல் நாடு புதிய பாதையில் பயணிக்கிறது. கட்சி, நிறத்தின் அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை தேசியத் தலைவராக நியமிக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

அதற்காக பெரும் அர்ப்பணிப்பை செய்துள்ளீர்கள். உங்களது வீடுகள், சொத்துக்கள் மற்றும் உங்களது எதிர்கால அரசியல் கட்டமைப்புகள் கூட இதன் காரணமாக இழக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அர்ப்பணித்த உங்கள் அனைவருக்கும் எங்கள் மரியாதையும் நன்றியும் உண்டு.

மேலும், ஜனாதிபதி தேர்தல் ஒக்டோபர் 17ஆம் திகதிக்கு முன்னதாக நடத்தப்பட வேண்டும். நாம் அதற்குத் தயாராகும்போது, ​​பல கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியிருக்கும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலுக்கான முன்னெடுப்புக்கள் இல்லை என்பதால் தேர்தலை காலம் தாழ்த்த நாம் முயற்சிப்பதாக கூறப்படுகிறது. ஆனால், எமக்கு அந்த தேவை இல்லை. தேர்தலை ஒத்திவைக்கும் நோக்கில் 22 ஆவது திருத்தம் முன்மொழியப்படுவதாக கூறப்படுகிறது.

அவ்வாறு சொல்பவர்கள் அரசியலமைப்பின் 83 ஆவது பிரிவை நன்றாக படிக்க வேண்டும். ஜனாதிபதி தேர்தலுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. செய்த தவறைத் திருத்துவதற்காகவே அரசியலமைப்புத் திருத்தம் முன்மொழியப்பட்டுள்ளது. நாம் அனைவரும் ஒன்றாக இருப்பதால், இந்த ஜனாதிபதித் தேர்தலில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்யக்கூடியதாக அமையும்.” என்று 22 பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன
தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி தேர்தல் – 80 சதவீதத்தை தாண்டிய தபால்மூல வாக்களிப்பு

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பில் 80 வீதத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக பிரதி தபால்மா அதிபர் ராஜித கே.ரணசிங்க...

வரலாற்றில் முதல் தடவையாக ஒரு டிரில்லியன் ரூபா வருமானம் ஈட்டிய சுங்கம்

வரலாற்றில் முதல் தடவையாக இவ்வருடத்தின் இதுவரையான காலத்தில் ஒரு டிரில்லியன் ரூபா சுங்க வருமானம் கிடைத்துள்ளதாக சுங்கப் பணிப்பாளர்...

ஒருவர் எத்தனை தபால் மூல வாக்குகளை பெற்றுள்ளார் என்பதை யாராலும் கூற முடியாது

எத்தனை தபால்மூல வாக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது என்பதை யாராலும் கூற முடியாது என கொழும்பு மாவட்ட செயலாளர் பிரசன்ன கினிகே...