நாளை(07) முதல் மின்சார விநியோகம் தடையின்றி வழங்கப்படலாம் என எதிர்ப்பார்ப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
கடந்த 3 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டு, சுமார் ஆறு மணித்தியாலயங்களின் பின்னர் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியது.
இதன்படி, நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் நடவடிக்கைகள் முழுமையாக வழமைக்கு திரும்பும் வரை சில பகுதிகளில் ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், நாளை முதல் மின்சார விநியோக நடவடிக்கை வழமைக்கு திரும்பும் என எதிர்பார்ப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.