follow the truth

follow the truth

October, 5, 2024
HomeTOP2முச்சக்கர வண்டிகளுக்கான புதிய செயலி விரைவில்

முச்சக்கர வண்டிகளுக்கான புதிய செயலி விரைவில்

Published on

இன்று நாடு சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதால், தொழில்முறை ஓட்டுநர்களாகிய நீங்கள் பல சங்கங்களை இணைத்து புதிய போக்குவரத்து சங்கத்தை உருவாக்கியுள்ளீர்கள்.

நாம் ஒரு பொருளாதாரக் கொள்கையின் கீழ் இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வது அவசியம். அன்று இந்த நாட்டில் வரிசை யுகம் காணப்பட்டது.

கொழும்பில் உள்ள இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தில் தொழில்சார் முச்சக்கரவண்டி மற்றும் போக்குவரத்து சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நேற்று (18) நடைபெற்ற சந்திப்பில் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், 08 இலட்சத்திற்கும் அதிகமானோர் முச்சக்கரவண்டித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். நாட்டில் ஏற்பட்ட அரசியல் ஸ்திரமின்மை காரணமாக கடந்த காலங்களில் பாரிய நெருக்கடிகளை நீங்கள் எதிர்கொண்டீர்கள். முச்சக்கர வண்டிகள் தொழில் ரீதியாக ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள ஸ்திரத்தன்மை காரணமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மீண்டும் நம் நாட்டிற்கு வருகை தருகின்றனர். நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த முச்சக்கரவண்டி ஓட்டுநர்கள் பெரும் சேவை செய்து வருகின்றனர். அடுத்த சில நாட்களில் முச்சக்கரவண்டிகளுக்கான புதிய தொலைபேசி செயலியொன்றை அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளோம் எனவும் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – விசாரணைகள் முழுமையற்றவை

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் முன்னெடுத்துள்ள விசாரணைகள் முழுமையற்றவை...

லங்கா சதொச நிறுவனத்தின் புதிய தலைவராக சமித்த பெரேரா

லங்கா சதொச நிறுவனத்தின் புதிய தலைவராக கலாநிதி சமித்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். வர்த்தக வாணிகத்துறை, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு...

இந்திய வெளிவிவகார அமைச்சர் – பிரதமர் ஹரினி சந்திப்பு

முழுமையான ஆதரவை வழங்க இந்தியா தயார்செப்டெம்பர் 21 நடைபெற்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்திக் கூட்டணி வெற்றி பெற்றதற்கு...