follow the truth

follow the truth

October, 5, 2024
Homeஉள்நாடுசெயற்கை நுண்ணறிவு குறித்து சபை ஒத்திவைப்பு விவாதம் ஜூலை 24

செயற்கை நுண்ணறிவு குறித்து சபை ஒத்திவைப்பு விவாதம் ஜூலை 24

Published on

அரச நிதி முகாமைத்துவம் சட்டமூலம் மற்றும் பொருளாதார நிலைமாற்றம் சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீடு விவாதத்தை எதிர்வரும் 25ஆம் திகதி நடத்துவதற்கு சபாநயாகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (18) இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார்.

ஜூலை 24ஆம் திகதி வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மு.ப 10.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே அவர்களால் கொண்டுவரப்படும் “தேசிய பாதுகாப்பு, அனைத்து மதங்கள் மற்றும் நாட்டின் கலாசாரம் ஆகியவற்றில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் மற்றும் உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்” குறித்த சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்துகாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரச புலனாய்வு சேவைக்கு புதிய பணிப்பாளர் நியமனம்

அரச புலனாய்வு சேவையின் (SIS) புதிய பணிப்பாளராக பிரதி பொலிஸ்மா அதிபர் தம்மிக்க குமார நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் இப்பதவியில்...

புதிய அரசியலமைப்பொன்று கொண்டுவரப்பட வேண்டும் என்பதே தமது நோக்கம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (05) வெள்ளவத்தை, அமரபுர பீடத்திற்கு சென்று இலங்கை அமரபுர பீடத்தின் பதில் மகாநாயக்க...

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – விசாரணைகள் முழுமையற்றவை

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் முன்னெடுத்துள்ள விசாரணைகள் முழுமையற்றவை...