தற்போது உலகளவில் உருவாகியுள்ள கொவிட் நெருக்கடியைவிட எதிர்வரும் காலங்களில் ஏற்படும் பெருந்தொற்றுகள் மிகக் கொடியதாக இருக்கலாம் என, ஆக்ஸ்ஃபோர்டு – ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியை உருவாக்கியவர்களில் ஒருவரான பேராசிரியர் டேம் சாரா கில்பெர்ட் எச்சரித்துள்ளார்.
பெருந்தொற்றால் ஏற்படும் இழப்புகளைத் தடுக்க, அதிக நிதி தேவைப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒமிக்ரான் கொரோனா திரிபுக்கு எதிராக தடுப்பூசிகள் குறைந்த செயல்திறன் கொண்டதாகவே இருக்கும் எனவும் ஒமிக்ரான் குறித்து அதிக தகவல்கள் வெளியாகும் வரை, மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “ஒரு வைரஸ் நம் உயிரையும் வாழ்வாதாரத்தையும் அச்சுறுத்துவது இது கடைசியாக இருக்காது. அடுத்து வருவது இன்னும் மோசமானதாக இருக்கக்கூடும். அது அதிகம் பரவக்கூடியதாகவோ அல்லது கொடியதாகவோ அல்லது இரண்டுமாகவோ இருக்கக்கூடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
“நாம் அனைத்தையும் கடந்துவிட்ட நிலையை அனுமதிக்க முடியாது. மேலும், நாம் அடைந்திருக்கும் பொருளாதார இழப்புகள், தொற்றைத் தடுப்பதற்கான நிதி இல்லை என்பதை உணர்த்துகிறது” என தெரிவித்தார்.
ஒமிக்ரான் திரிபு அதன் ஸ்பைக் புரதத்தில் வைரஸ் பரவலை அதிகரிக்க அறியப்பட்ட பிறழ்வுகள் இருப்பதாக கூறினார்.
“ஆனால், தடுப்பூசிகளால் தூண்டப்படும் ஆன்டிபாடிகள், ஒமிக்ரான் தொற்று ஏற்படுவதைத் தடுப்பதில் குறைவான செயல்திறன் கொண்டதாக இருக்கும் வகையிலான கூடுதல் மாற்றங்கள் உள்ளன.
“இதுகுறித்து மேலும் அறிந்துகொள்ளும் வரை நாம் கவனமாக இருக்க வேண்டும். இந்த புதிய ஒமிக்ரான் திரிபு பரவுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். எனவும் பேராசிரியர் டேம் சாரா கில்பெர்ட் குறிப்பிட்டுள்ளார்.