follow the truth

follow the truth

April, 29, 2025
Homeவிளையாட்டுவீடியோவால் வெடித்த சர்ச்சை - முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மீது முறைப்பாடு

வீடியோவால் வெடித்த சர்ச்சை – முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மீது முறைப்பாடு

Published on

மாற்றுத்திறனாளிகளை போன்று கேலி செய்து இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் வீடியோ பதிவேற்றிய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஹர்பஜன் சிங் , சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், குர்கீரத் மான் ஆகியோர் மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோ குறித்து ஹர்பஜன் தனது எக்ஸ் பதிவில் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை என்று தெளிவுபடுத்தினார்.

இந்த நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு மேம்பாட்டுக்கான தேசிய மையத்தின் (NCPEDP) செயல் இயக்குநர்
அர்மான் அலி, அமர் காலனி பொலிஸ் நிலைய அதிகாரியிடம் முறைப்பாடு அளித்துள்ளார்.

இந்தப் முறைப்பாட்டில் கிரிக்கெட் வீரர்களை தவிர மெட்டா இந்தியா நிறுவனத்தின் துணைத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான சந்தியா தேவநாதன் ஆகியோரும் அடங்குவர்.

முறைப்பாட்டின்படி, மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராம், தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000ஐ மீறி, இதுபோன்ற வீடியோவை பதிவேற்றம் செய்ய அனுமதித்ததாக கூறப்பட்டுள்ளது.

“இது தொடர்பாக அமர் காலனி பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. விசாரணைக்காக இந்த முறைப்பாடு மாவட்ட இணைய பிரிவுக்கு அனுப்பப்படும்,” என்று பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரிஷப் பண்டுக்கு 24 இலட்சம் ரூபா அபராதம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு...

விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்குமா சென்னை? – ஹைதராபாத்துடன் இன்று மோதல்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், சென்னையில் இன்று நடக்க இருக்கும் 43-ஆவது லீக் போட்டியில் ஐதராபாத் அணியை சென்னை சூப்பர்...

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இன்றைய ஐபிஎல் போட்டியில் அஞ்சலி

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (23) இரவு ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 41-வது லீக்...