follow the truth

follow the truth

April, 20, 2025
Homeஉலகம்மியன்மார் முன்னாள் தலைவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை

மியன்மார் முன்னாள் தலைவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை

Published on

மியன்மார் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகிக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கருத்து வேறுபாடுகளைத் தூண்டுதல் மற்றும் கொவிட் விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார்.

76 வயதான அவர் பெப்ரவரியில் இராணுவப் புரட்சி மூலம் வெளியேற்றப்படுவதற்கு முன்புஇ தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கத்திற்கு தலைமை தாங்கினார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் வாக்காளர் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.

இதனையடுத்து, ஆங் சான் சூகி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதுடன், பல ஊழல் குற்றச்சாட்டுகள்,உத்தியோகபூர்வ இரகசிய சட்டத்தை மீறுதல் மற்றும் பொது அமைதியின்மையை தூண்டுதல் உட்பட பல குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.

அவர்மீதான 11 குற்றச்சாட்டுக்களில் ஒரு குற்றச்சாட்டுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அமெரிக்காவில் டிரம்பிற்கு எதிராக தொடரும் ஆர்ப்பாட்டங்கள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நடவடிக்கைகளிற்கு எதிராக அமெரிக்காவின் பல நகரங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் சனிக்கிழமை முதல் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இறக்குமதி...

‘எனது மரணத்தை உலகமே பேசும்’ – இஸ்ரேல் தாக்குதலில் காசா பெண் பத்திரிகையாளர் குடும்பத்துடன் பலி

இஸ்ரேல் - ஹமாஸ் போரின் விளைவுகளை புகைப்படங்களின் மூலம் உலகிற்கு காட்டிய காசாவைச் சேர்ந்த புகைப்பட பத்திரிகையாளர் ஃபாத்திமா...

மஸ்க் – மோடி இடையே தொலைபேசி கலந்துரையாடல்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அரசாங்க செயல்திறன் திணைக்களத் தலைவர் ஈலோன் மஸ்க் இடையே தொலைபேசி...