follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுதயாசிறியின் முறைப்பாடுகள் ஜூலை 23 விசாரணைக்கு

தயாசிறியின் முறைப்பாடுகள் ஜூலை 23 விசாரணைக்கு

Published on

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோருக்கு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய தமது கட்சி உறுப்புரிமையை ரத்துச் செய்ய எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு முறைப்பாடுகளை எதிர்வரும் 23ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த முறைப்பாடுகள் தொடர்பான இடைக்கால கோரிக்கைகள் மீதான உத்தரவு இன்று (16) அறிவிக்கப்படவிருந்த நிலையில், எதிர் தரப்பு சமர்ப்பித்த ஆவணங்கள் வழக்குப் பதிவில் சேர்க்கப்படவில்லை என்று நீதவான் தெரிவித்தார்.

அதன்படி, உரிய ஆவணங்களைத் தாக்கல் செய்ய இருதரப்புக்கும் அனுமதி அளித்த நீதிமன்றம், குறித்த வழக்கை எதிர்வரும் 23ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உத்தரவிட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...