follow the truth

follow the truth

September, 8, 2024
Homeவிளையாட்டுஒலிம்பிக் தீபத்தை ஏந்திய முதல் இலங்கையர்

ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய முதல் இலங்கையர்

Published on

ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய முதல் இலங்கையர் என்ற பெருமையை பிரான்ஸின் வெதுப்பக உரிமையாளர் தர்ஷன் செல்வராஜா பெற்றுள்ளார்.

ஒலிம்பிக் தீபம் தர்ஷன் செல்வராஜாவிடம் நேற்று(15) வழங்கப்பட்டுள்ளதுடன், அவர் அதை ஏந்தி 2.5 2.5 கிலோமீற்றர் வலம் வந்துள்ளார்.

2024ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகரான பரிஸில் நடைபெறுகிறது.

ஒலிம்பிக் தொடக்க விழா தொடங்குவதற்கு முன்னதாக ஒலிம்பிக் ஜோதியானது, மார்சேயில் தொடங்கி பிரான்ஸின் பல்வேறு நகரங்கள் வழியாக ஒலிம்பிக் ஜோதியை ஏந்திய ஊர்வலம் நடைபெறுகிறது.

இந்நிலையில், இலங்கையிலிருந்து 2006 ஆம் ஆண்டு பிரான்ஸ் சென்றடைந்த தர்ஷன் செல்வராஜா, பரிஸ் நகரில் கடந்த வருடம் பாண் தயாரிப்பில் முதலிடம் பெற்றவர் ஆவார்.

அத்துடன், பிரான்ஸ் ஜனாதிபதியின் வசிப்பிடமாகிய எலிஸே மாளிகைக்கு பாண் விநியோகம் செய்யும் உரிமையையும் இவர் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தர்ஷன், சிறந்த பாண் உற்பத்தியாளருக்கான விருதை பரிஸில் கடந்த வருடம் பெற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2027 ஆசியக் கிண்ண கால்பந்து போட்டி – தகுதிச் சுற்று 10ஆம் திகதி

எதிர்வரும் 10ஆம் திகதி சவூதி அரேபியாவில் நடைபெறவுள்ள 2027ஆம் ஆண்டுக்கான ஆசிய கால்பந்தாட்டக் கிண்ணத் தகுதிச் சுற்றுப் போட்டியின்...

நியூசிலாந்து அணியின் சுழல் பந்து பயிற்சியாளராக ரங்கன ஹேரத்

நியூசிலாந்து அணியின் சுழல் பந்து பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச...

கிரிக்கெட் தடை செய்யப்பட்ட இத்தாலிய நகரம்

இத்தாலியின் மோன்கோல்ஃபோன் அதிகாரிகள் அந்நகரில் கிரிக்கெட் விளையாட தடை விதித்துள்ளனர். அந்த நகரத்தில் வசிப்பவர்களில் 30% பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்களில்...