follow the truth

follow the truth

April, 29, 2025
HomeTOP2"எல்லோருக்கும் கடினமான ஒரு காலம் வரும்.." - வனிந்து ஹசரங்க

“எல்லோருக்கும் கடினமான ஒரு காலம் வரும்..” – வனிந்து ஹசரங்க

Published on

வெளியில் இருந்து வரும் சவால்கள் விளையாட்டிற்கு இடையூறாக இல்லாமல் தன்னால் முடிந்ததைச் செய்வதாக நம்புவதாக இலங்கையின் முன்னாள் இருபதுக்கு 20 கிரிக்கெட் அணித்தலைவர் வனிந்து ஹசரங்க தெரிவித்துள்ளார்.

நேற்று (15) தம்புள்ளை சிக்ஸர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் வெற்றிபெற்றதன் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“எவருக்கும் அவர்களின் வாழ்க்கையில் கடினமான நேரம் என ஒன்று வரும். நான் அவர்களை நாளுக்கு நாள் மெதுவாக எதிர்கொள்கிறேன். நான் என்ன செய்ய முடியும் என்று எனக்குத் தெரியும். என்ன செய்யப்பட்டுள்ளது என்று எனக்குத் தெரியும்.

ஒரு வீரராக, வெளியில் இருந்து வரும் சவால்கள் எனது ஆட்டத்திற்கு இடையூறாக இல்லாமல், விளையாட்டிற்கு என்னால் என்ன செய்ய முடியும் என்று நான் எப்போதும் யோசிப்பேன்.

இதில் எனக்கு நம்பிக்கை அதிகம். இந்தப் போட்டிக்கு மட்டுமல்ல. அடுத்த தேசிய அணி போட்டிகளில் விளையாட இது பெரும் நம்பிக்கையாக உள்ளது.

இறுதிப் போட்டியிலும் இந்த மாதிரியான ஆட்டத்தின் மூலம் தன்னம்பிக்கையை முன்னோக்கி எடுத்துச் செல்ல முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஏனெனில், கடந்த ஆண்டு அதிக ஓட்டங்கள் குவித்து அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி போட்டியின் நாயகனாக இருந்தேன்…”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரிஷப் பண்டுக்கு 24 இலட்சம் ரூபா அபராதம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு...

பிரசன்ன ரணவீரவின் ரிட் மனு தள்ளுபடி

களனி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள அரசாங்க காணியை சட்டவிரோதமாக கையகப்படுத்திய சம்பவம் தொடர்பாக தம்மை கைது செய்வதைத்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 100 மி.மீ அளவான பலத்த மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுவதாக...