follow the truth

follow the truth

April, 20, 2025
HomeTOP1ரயில் பணிப்புறக்கணிப்பு குறித்து இன்று இறுதித் தீர்மானம்

ரயில் பணிப்புறக்கணிப்பு குறித்து இன்று இறுதித் தீர்மானம்

Published on

தமது கோரிக்கைகள் தொடர்பிலான எதிர்கால தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்பில் இன்று (16) இறுதித் தீர்மானத்திற்கு வரவுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகளை வழங்க அதிகாரிகள் இணக்கம் தெரிவித்த போதிலும் இதுவரை உரிய தீர்வு கிடைக்கப்பெறவில்லை என சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.

பதவி உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து நிலைய அதிபர்கள் அண்மையில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதுடன், உரிய பிரச்சினையை அமைச்சரவையில் முன்வைத்து தீர்வு வழங்கப்படும் என விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரின் உறுதிமொழிக்கு அமைய பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

எவ்வாறாயினும், தமது கோரிக்கைகளுக்கு அமைச்சரவை நேற்று (15) கவனம் செலுத்தாததால், இன்று காலை கூடி தமது எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கவுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.

இதேவேளை, ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் எதிர்காலத்தில் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட நேர்ந்தால் அதற்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என அதன் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளின் 6வது ஆண்டு நிறைவையிட்டு முஸ்லிம் அமைப்புகளின் கூட்டு அறிக்கை

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த துயரமான ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவங்களின் ஆறு ஆண்டுகளை இன்று...

கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை

உயிர்த்த ஞாயிறு அன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு,...

ட்ரம்பின் பரஸ்பர வரி : அமெரிக்கா பறந்தது இலங்கை தூதுக்குழு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் அண்மையில் விதிக்கப்பட்ட வரிகள் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட இலங்கையின் தூதுக்குழு ஒன்று அமெரிக்காவிற்கு...