யாழ். மாவட்ட சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை தற்போதைய நிலவரம் தொடர்பில் ஆராய்வதற்காக சுகாதார அமைச்சின் குழுவொன்று வைத்தியசாலைக்கு நாளை செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
வடக்கு சுகாதாரத்துறையில் ஏற்பட்டதாகக் கூறப்படும் பல்வேறு முறைகேடுகள் தொடர்பில் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா அண்மையில் சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தியிருந்த நிலையில் குறித்த வைத்தியசாலை வைத்தியர்களின் எதிர்ப்பை அடுத்து அவரை இடமாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக நாளைய தினம் சுகாதார அமைச்சின் குழுவொன்று சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.