சியால்கோட்டில் இலங்கை பிரஜை பிரியந்த குமார தியவதனவை, தெய்வ நிந்தனை என்ற பெயரில் உயிருடன் கொன்ற சம்பவம் குறித்து பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் பர்வேஸ் கட்டக் கருத்து வெளியிட்டுள்ளார்.
”இஸ்லாத்தில் அந்த இளைஞர்கள் ஆர்வம் கொண்டவர்கள்.இஸ்லாம் என்ற கோஷம் எழுப்பப்பட்டதால், இந்த இளைஞர்கள் உற்சாகமடைந்தனர். இந்தக் கொலை மூலம் பாகிஸ்தான் அழிவை நோக்கி செல்கிறது என்று அர்த்தமில்லை. ஒவ்வொருவருக்கும் அவரவர் கருத்து உள்ளது. பிரியந்த குமார தியவதனவை கும்பல் கொடூரமாகக் கொன்றது மிகவும் பொதுவான விஷயம். ” என்று குறிப்பிட்டுள்ளார் பாகிஸ்தான் பாதுகாப்பமைச்சர்.