follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுகொவிட் தொற்றுக்கு மத்தியில் இலங்கை முஸ்லிம்களின் அவல நிலையை வெளிப்படுத்தும் அமான் அஷ்ரஃபின் "ஓட்டமாவடி"

கொவிட் தொற்றுக்கு மத்தியில் இலங்கை முஸ்லிம்களின் அவல நிலையை வெளிப்படுத்தும் அமான் அஷ்ரஃபின் “ஓட்டமாவடி”

Published on

கொழும்பு, ஜூலை 12, 2024: அமான் அஷ்ரஃப் இயக்கத்தில் வெளியான “ஓட்டமாவடி” திரைப்படம், கடந்த புதன்கிழமை (10) கொழும்பு PVR இல் பிரமாண்டமாக வெளியிடப்பட்டிருந்தது. இதில் இலங்கையின் முதல் பெண்மணி, பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க மற்றும் அரச பிரதிநிதிகள், இராஜதந்திர உறுப்பினர்கள், பெரும் நிறுவனங்களின் தலைவர்கள், இலங்கை சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் உள்ளிட்ட முக்கிய அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

கொவிட்-19 தொற்றுநோயின் போது இலங்கை முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட போராட்டத்தின் சொல்லப்படாத ஒரு கடுமையான பயணத்தின் கதையை இந்த ஆவணப்படம் வெளிப்படுத்தியுள்ளதோடு, கொரோனா வைரஸ் காரணமாக இறந்த தங்கள் அன்புக்குரியவர்களின் உடல்களின் கட்டாய தகனங்கள் மூலம் அவர்களுக்கு உண்டான சோதனையை பார்வையாளர்களுக்கு இந்தத் திரைப்படம் எடுத்துக் கூறுகின்றது.

2019 இன் பிற்பகுதியில் ஏற்பட்ட கொவிட்-19 பெருந்தொற்று, இலங்கையில் பேரழிவுகரமான தாக்கத்தை ஏற்படுத்தியதோடு, சுமார் 17,000 உயிர்களை அது காவு கொண்டது. நாடு முழுவதிலும் உள்ள குடும்பங்கள் தங்களது உறவினர்களின் இழப்புக்களுக்காக துக்கம் அனுஷ்டித்துக் கொண்டிருந்த நிலையில், இலங்கை வாழ் முஸ்லிம் சமூகம் மற்றுமொரு துன்பத்தை எதிர்கொண்டது. இஸ்லாமிய நம்பிக்கைகள் மற்றும் மரபுகளுக்கு நேரடியாக முரண்பட்ட ஒரு நடைமுறையான, தங்களது இறந்த உறவினர்களின் உடல்களின் கட்டாய தகனமே அதற்கான காரணமாகும்.

இந்த தயாரிப்பை உருவாக்குவதற்கான பின்னணிக்கு காரணமான உந்துதலை விளக்கிய இயக்குனர் அமான் அஷ்ரஃப் தெரிவிக்கையில், “இந்த கதை மூலம், எனது மக்களைப் பற்றி என்னால் சொல்ல முடிந்துள்ளது. இது முஸ்லிம்களைப் பற்றிய ஒரு கதை அல்ல, எவ்வித விஞ்ஞானபூர்வ ஆதாரங்களுமின்றி, அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட இலங்கையர்களைப் பற்றிய கதை என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன். தங்களது அரசியலமைப்பு உரிமைகள் மீறப்பட்டதால் மௌனமாக அவதிப்பட்ட இலங்கை குடிமக்கள் பற்றிய கதையாகும். தமது சக நாட்டு மக்களுக்கு ஏற்பட்ட அநீதியை உணர்ந்த, பலதரப்பட்ட இன, மதப் பின்னணிகளில் உள்ள இலங்கையர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய ஒரு திரைப்படம் இதுவாமாகும். இது எதிர்காலத்திற்காக பதிவு செய்யப்பட வேண்டிய ஒரு கதை என அவர்கள் நம்புகின்றனர். இதன் மூலம், எந்தவொரு இலங்கையர்களும் இதுபோன்ற கொடூரமான மற்றும் தாங்க முடியாத வகையில் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படக் கூடாது எனும் நிலைப்பாட்டை அவர்கள் உறுதி செய்துள்ளனர்.” என்றார்.

Black Coffee Films தயாரிப்பில் வெளியிடப்பட்டுள்ள “ஓட்டமாவடி”, சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள், அரசாங்க பிரதிநிதிகள், மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்டோரின் ஆழமான நேர்காணல்கள் மூலம், குறித்த சர்ச்சைக்குரிய காலகட்டத்தை ஆழமாக ஆராய்ந்துள்ள ஆவணப்படமாகும்.

இந்தத் திரைப்படம் ஓட்டமாவடி எனும் தொலைதூர கிராமத்தின் பெயரைக் கொண்டதாக பெயரிடப்பட்டுள்ளது. அரசாங்கம் அதன் கட்டாய தகனக் கொள்கையை மாற்றிய பின், அடக்கம் செய்ய அனுமதிக்கப்பட்ட இடமாக இது விளங்குகின்றது.

Black Coffee Productions நிறுவனத்தின் முதலாவது தயாரிப்பான, “ஓட்டமாவடி” திரைப்படம், இலங்கையின் ஆவணப்படத் துறையில் ஒரு முக்கிய பங்களிப்பை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...