அயர்ன் டோம் அமைப்பினால் அழிக்கப்பட்ட ஏவுகணையின் இரும்புத் துண்டினால் தாக்கப்பட்டதில் இஸ்ரேலில் பணியாற்றும் இலங்கையர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
காயமடைந்தவர் வடக்கு இஸ்ரேலின் லெபனான் எல்லைக்கு அருகில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த இலங்கையர் என நாட்டிலுள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
தலையில் இரும்புத் துண்டினால் காயமடைந்த நபரை இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டாரவின் நிலை கவலைக்கிடமாக இல்லை தெரிவிக்கப்படுகின்றது.