follow the truth

follow the truth

September, 8, 2024
HomeTOP2"பொஹொட்டுவவிற்கு வேட்பாளர் யாரும் இல்லை"

“பொஹொட்டுவவிற்கு வேட்பாளர் யாரும் இல்லை”

Published on

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்தப்படும் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை முன்வைப்பது குறித்து தமது கட்சி இன்னும் தீர்மானிக்கவில்லை எனவும், ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு பொருத்தமான நபர் தமது கட்சியில் இல்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

தற்போதைய ஜனாதிபதி, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால், தனது தகுதியை அறிந்த ஒரு நபராக தனது வெற்றிக்காக தன்னை அர்ப்பணிப்பதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

கம்பஹா உடுகம்பொல பிரதேசத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றும் போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு இன்று நம்பிக்கை இல்லை

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு நம்பிக்கை இல்லை என நகர அபிவிருத்தி மற்றும்...

கவர்ச்சியான பிரச்சாரங்களால் ஆட்சிக்கு அவசரப்படுகிறார் அனுர

ஊழலை ஒழிப்பதற்கோ அல்லது மோசடியாளர்களைத் தண்டிப்பதற்கோ ஜனாதிபதி அதிகாரம்தான் தேவையென தேசிய மக்கள் சக்தி கருதக் கூடாது என...