follow the truth

follow the truth

February, 5, 2025
HomeTOP1பேலியகொடையில் அழுகிய மீன் விற்பனை அதிகரிப்பு

பேலியகொடையில் அழுகிய மீன் விற்பனை அதிகரிப்பு

Published on

பேலியகொட மத்திய மீன் சந்தையில் அழுகிய மீன் விற்பனை அதிகரித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சு கண்டுபிடித்துள்ளது.

கடந்த மே மாதம் 17ஆம் திகதி பேலியகொட மத்திய மீன் சந்தை முகாமையாளர் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் கெட்டுப்போன மீன்கள் மற்றும் தகாத மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.

இதனால், மீன்பிடி அமைச்சின் செயலாளராக இருந்த முகாமைத்துவ அறக்கட்டளையின் தலைவி குமாரி சோமரத்ன, நாரா நிறுவனம் மற்றும் பொது சுகாதார பரிசோதகரிடம் அறிக்கைகளை கோர தீர்மானித்துள்ளார்.

பேலியகொடை மத்திய மீன் சந்தையில் 154 மொத்த வியாபாரக் கடைகளும் 124 சில்லறை மீன் கடைகளும் உள்ளதாக பேலியகொடை மத்திய மீன் மொத்த விற்பனை சங்கத்தின் செயலாளர் ஜயந்த குரே கூறுகிறார்.

அப்புறப்படுத்தப்படும் அழுகிய மீன்களை சேகரித்து விற்பனை செய்யும் கும்பல் ஒன்று இருப்பதாகவும், இது தொடர்பில் தொழிற்சங்க நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மீன்பிடி அமைச்சின் செயலாளராக இருந்த குமாரி சோமரத்ன, நாரா நிறுவனம் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு விரிவான விசாரணை நடத்தி அறிக்கைகளை உடனடியாக சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தி இரண்டு மாதங்கள் கடந்துள்ள போதிலும், இதுவரை ஒரு அறிக்கை கூட வழங்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரசு நெல்லுக்கான நிர்ணய விலையை அறிவித்தது

ஒரு கிலோ நெல்லுக்கு வழங்கப்படும் விலைகளை அரசாங்கம் இன்று (05) நெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் அறிவித்துள்ளது. விவசாயிகளிடமிருந்து நாளை...

ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகியது

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில் மற்றும் பலஸ்தீன அகதிகளுக்கு உதவி வழங்கும் நிறுவனத்திலிருந்து அமெரிக்காவை விலக்கிக்...

இராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க

இலங்கை இராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். பெப்ரவரி 9 ஆம் திகதி முதல்...