follow the truth

follow the truth

April, 17, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாசரியானதைச் செய்து சரியான பாதையில் செல்ல வேண்டும்

சரியானதைச் செய்து சரியான பாதையில் செல்ல வேண்டும்

Published on

இன்று மக்கள் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், வருமானம் ஈட்டும் வழிகளிலும் மீளமுடியாத வகையில் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். கஷ்டங்கள் நிறைந்த பெரும் அழுத்தங்களுக்கு மத்தியில் ஜீவித்து வருகின்றனர்.

நகர்ப்புற வறுமை கூட வியாபித்துள்ளது. இதனால் சமூக விரோத நடவடிக்கைகள் கூட இன்று சமூகத்தில் இடம்பெற்று வருகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

சகல பாடசாலை மாணவர்களும் போதைப் பொருளுக்கு அடிமையாகாது நடுநிலை சிந்தனையோடு செயற்பட வேண்டும். நேரிய சிந்தனையோடு பாடசாலை பிள்ளைகள் வளர வேண்டும். மதுபானம், போதைப்பொருள் மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு ஆளாகக் கூடாது. மதுப் பழக்கம் ஒரு நாகரீகமற்ற செயல் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பெற்றோர்களும் மதுவைத் தவிர்க்க வேண்டும். பிள்ளைகள் பெற்றோரைப் பின்பற்றுகிறார்கள். எனவே இந்த விடயத்தில் கூடிய கவனம் செலுத்தி நடந்து கொள்ள வேண்டும்.

சரியானதைச் செய்து சரியான பாதையில் செல்ல வேண்டும். பெரியவர்களை மதிக்க வேண்டும். பணிவாக நடந்து கொள்ள வேண்டும். தகவல் தொழில்நுட்பத்துறையில் பிரவேசித்து ஸ்மார்ட் கல்வியை முன்னெடுக்க வேண்டும்.

கல்வி எனும் பெறுமதிமிக்க வளத்தை எவராலும் ஒருபோதும் திருட முடியாது. எனவே பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியையும் நல்ல நாகரீக வாழ்க்கையும் அமைத்துக் கொடுக்க சகலரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் மற்றும் அகராதிகள் என்பன கொழும்பு, திம்பிரிகஸ்யாய, சசுமயவர்தன மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அநுரவின் தரம் தாழ்ந்த அரசியல் கலாசாரத்திற்கு ஒத்துழைக்க வேண்டாம் – சஜித்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்களுக்கு சேவை செய்வதை விட, பொய்யான பிரகடனங்களைச் செய்வதில் திறமை மிகுந்தது என...

புதிய அமெரிக்க வரிக் கொள்கை தொடர்பில் அவசர தீர்மானத்தினை எட்டுமாறு ரணில் வலியுறுத்து

அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கையால் இந்த நாட்டில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புக்களை இழக்கும் அபாயம் இருப்பதாக...

இன்னும் கொஞ்ச நாளில் ஈஸ்டர் தாக்குதல் மூளையாளிகள் குறித்து தெரியவரும் – ஜனாதிபதி

ஏப்ரல் 21 ஆம் திகதி முன்னூறுக்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நடந்து ஆறு ஆண்டுகள்...