follow the truth

follow the truth

September, 8, 2024
HomeUncategorizedகுற்றவாளிகளை ஊடகங்களுக்கு முன் கேள்வி கேட்கக் கூடாது

குற்றவாளிகளை ஊடகங்களுக்கு முன் கேள்வி கேட்கக் கூடாது

Published on

குற்றவாளிகளை ஊடகங்களுக்கு முன் கொண்டுவந்து கேள்வி கேட்கக் கூடாது என சபைத் தலைவர் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு தெளிவான நிலைபேறான தீர்வொன்று அவசியம். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த வாய் மொழி மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

தற்போது பாதாள உலகத்தினரால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தாக்கம் மற்றும் பயம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது சந்தேக நபர்களைக் கொண்டு வந்து கேள்வி கேட்பதும் பொலிஸாரினால் கேட்பதும் ஊடகங்களில் காட்டப்படுகின்றன.
வரலாற்றில் கடுமையான குற்றங்கள் நடந்தபோதும் ஊடகங்களின் முன்னிலையில் கேள்வி கேட்பதில்லை. எமது நாட்டின் குற்றவியல் சட்டம் நகைச்சுவையாக உள்ளது.

சட்டத்திற்கு காணப்படும் பயத்தை இல்லாது செய்ய வேண்டாம். இந்த இரண்டு விடயங்களும் நாட்டில் குற்றங்களின் அதிகரிப்பிற்கு ஏதுவாகலாம் என்றும் அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த மேலும் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரச உத்தியோகத்தர்கள் முதுகு நிமிர்ந்து தமது பணிகளைச் செய்வதற்கான பின்னணி உருவாக்கப்படும் – ஜனக ரத்நாயக்க

அரச உத்தியோகத்தர் முதுகெலும்புடன் நிமிர்ந்து வேலை செய்ய வேண்டுமாயின் அதற்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என ஐக்கிய லங்கா...

ரவூப் ஹகீமின் இலக்ஷன் ஆர்டர்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கடந்த உள்ளுராட்சி மன்றங்களில் தவிசாளர் மற்றும் மேயர் பதவி வகித்தவர்கள் ஜனாதிபதி...

யாழ். தந்தை செல்வா கலையரங்கில் ஆர்.சம்பந்தனுக்கு அஞ்சலி

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனது பூதவுடல் யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வா கலையரங்கில் அஞ்சலிக்காக...