தியவடனகே தொன் நந்தசிறி பிரியந்த குமாரவின் சடலம் நாளை இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த 03ஆம் திகதி பாகிஸ்தானில் சியால்கோட் பகுதியில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் சடலம் நாளை(06) ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை ஊடாக அரச செலவில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.