follow the truth

follow the truth

April, 11, 2025
HomeTOP2தொழிற்சங்க தலைவர்களுக்கு எதிராக கடுமையான முடிவுகள் எடுக்க வேண்டும்

தொழிற்சங்க தலைவர்களுக்கு எதிராக கடுமையான முடிவுகள் எடுக்க வேண்டும்

Published on

மக்களை ஒடுக்கும் தொழிற்சங்க தலைவர்களுக்கு எதிராக கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும் என ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்கங்கள் மக்களை ஒடுக்குவதற்கு இடமளிக்கக் கூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (11) கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

“ரயில்வே சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்றியுள்ள நிலையில், சில அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்காக தொழிற்சங்க தலைவர்கள் மேற்கொள்ளும் சில நடவடிக்கைகளால் மக்கள் அவதிப்படுகின்றனர். பொருளாதார நெருக்கடியில் இதையெல்லாம் செய்ய இயலாது என்பதை நாம் அறிவோம்.

இதை நாட்டு மக்களும் புரிந்து கொண்டுள்ளனர். இந்த பொதுச்சேவை இவ்வாறு செயற்படுமாயின் இம்மக்களை ஒடுக்கும் இந்த தொழிற்சங்க தலைவர்கள் தொடர்பில் உரிய அமைச்சர்கள் சில தீர்மானங்களை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றோம்.

இல்லையெனில், இதைச் செய்ய முடியாது. மாண்புமிகு அமைச்சர் அவர்கள் இது குறித்து உங்கள் மூலம் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் "கிளீன் ஸ்ரீலங்கா" திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு...

தேசிய சுற்றுலா ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை

சுற்றுலாக் கைத்தொழிலுடன் சம்பந்தப்பட்ட பல்வேறு நிறுவனங்களை ஒன்றிணைத்து தேசிய சுற்றுலா ஆணைக்குழுவொன்றை தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலாப்...

இராஜகிரியவில் 22 இந்திய பிரஜைகள் கைது

காலாவதியான விசாக்களுடன் இருந்த 22 இந்திய பிரஜைகள் இன்று(10) குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள்...