follow the truth

follow the truth

September, 8, 2024
HomeTOP2தொழிற்சங்க தலைவர்களுக்கு எதிராக கடுமையான முடிவுகள் எடுக்க வேண்டும்

தொழிற்சங்க தலைவர்களுக்கு எதிராக கடுமையான முடிவுகள் எடுக்க வேண்டும்

Published on

மக்களை ஒடுக்கும் தொழிற்சங்க தலைவர்களுக்கு எதிராக கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும் என ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்கங்கள் மக்களை ஒடுக்குவதற்கு இடமளிக்கக் கூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (11) கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

“ரயில்வே சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்றியுள்ள நிலையில், சில அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்காக தொழிற்சங்க தலைவர்கள் மேற்கொள்ளும் சில நடவடிக்கைகளால் மக்கள் அவதிப்படுகின்றனர். பொருளாதார நெருக்கடியில் இதையெல்லாம் செய்ய இயலாது என்பதை நாம் அறிவோம்.

இதை நாட்டு மக்களும் புரிந்து கொண்டுள்ளனர். இந்த பொதுச்சேவை இவ்வாறு செயற்படுமாயின் இம்மக்களை ஒடுக்கும் இந்த தொழிற்சங்க தலைவர்கள் தொடர்பில் உரிய அமைச்சர்கள் சில தீர்மானங்களை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றோம்.

இல்லையெனில், இதைச் செய்ய முடியாது. மாண்புமிகு அமைச்சர் அவர்கள் இது குறித்து உங்கள் மூலம் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...