இரண்டாவது லங்கா பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் போட்டி இன்று கொழும்பு, ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
ஐந்து அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டி டிசம்பர் 23 ஆம் திகதி வரை கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.
லங்கா பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் போட்டியை காண விரும்பும் ரசிகர்கள் இன்று(05) முதல் நுழைவுச் சீட்டுகளை கொள்வனவு செய்யும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
அதன்படி, தினசரி காலை 9.00 மணி மாலை 5.00 மணி பிரேமதாச மைதானத்திலும், இலங்கை கிரிக்கெட் தலைமையகத்திலும் டிக்கெட் கவுண்டர்கள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.