follow the truth

follow the truth

April, 9, 2025
HomeTOP2எதிர்வரும் நவம்பர் 17ம் திகதி அநுர ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் - ஹரிணி

எதிர்வரும் நவம்பர் 17ம் திகதி அநுர ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் – ஹரிணி

Published on

இந்த வருடம் நவம்பர் மாதம் 17 ஆம் திகதிக்குள் புதிய ஜனாதிபதி ஒருவர் நியமிக்கப்படுவார் என இந்நாட்டு மக்கள் நம்புவதாகவும், தெரிவு செய்யப்படும் புதிய ஜனாதிபதி தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார என இந்நாட்டு மக்கள் நம்புவதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய தெரிவித்திருந்தார்.

நாவலப்பிட்டி மாவத்துறை நகரில் நடைபெற்ற “உடைந்த தாய்நாட்டை கட்டியெழுப்புவோம்” என்ற தலைப்பில் தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய இவ்வாறு தெரிவித்திருந்தார்.

மேலும் கருத்து தெரிவித்த ஹரிணி அமரசூரிய, நாட்டின் பெரும்பான்மையான மக்கள் தேசிய மக்கள் சக்தியுடன் கூடியுள்ளனர் எனவும், மக்களை தவறாக வழிநடத்த அரசாங்கமும் எதிர்க்கட்சியும் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியினை நோக்கி திரண்டிருக்கும் நாட்டு மக்கள், அரசு மற்றும் எதிர்க்கட்சிகளின் அவமானங்களை ஏற்காது, நாட்டின் பெரும்பான்மையான மக்கள் தேசிய மக்கள் படையில் நாளுக்கு நாள் இணைந்து வருகின்றதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வியாழேந்திரனுக்கு பிணையில் செல்ல அனுமதி

இலஞ்ச ஊழல் சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்துள்ள...

வெலிக்கடை பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞனின் உடலை தோண்டி எடுக்குமாறு உத்தரவு

அண்மையில் வெலிக்கடை பொலிஸ் காவலில் இருந்தபோது உயிரிழந்த இளைஞனின் உடலை தோண்டி எடுத்து, மூன்று விசேட வைத்தியர்கள் கொண்ட...

தேர்தல் சட்டத்தை மீறிய 13 வேட்பாளர்கள் கைது

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரை 13 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2025 உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தேர்தல்...