follow the truth

follow the truth

October, 6, 2024
Homeஉள்நாடுகொம்பனித்தெரு மேம்பாலம் அடுத்த வாரம் மக்கள் பாவனைக்கு

கொம்பனித்தெரு மேம்பாலம் அடுத்த வாரம் மக்கள் பாவனைக்கு

Published on

கொம்பனித்தெரு, நீதிபதி அக்பர் மாவத்தை மற்றும் உத்தரானந்த மாவத்தையை இணைக்கும் புகையிரதப் பாதைக்கு மேலே நிர்மாணிக்கப்பட்ட மேம்பாலத்தின் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகள் நிறைவுசெய்து அடுத்த வாரம் மக்கள் பாவனைக்குக் கையளிக்கப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எஸ். பி. எம் சூரிய பண்டார தெரிவித்துள்ளார்.

மேலும், கொஹுவல மேம்பாலம் அதற்கு அடுத்த வாரம் மக்கள் பாவனைக்குக் கையளிக்கப்படவுள்ளது. மேலும், துறைமுக நுழைவாயில் பாதையின் பணிகள் செப்டம்பர் முதல் பாதியில் நிறைவடையும்.

இது தவிர வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் நாடளாவிய ரீதியில் ஆயிரக்கணக்கான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதில் கடந்த பெப்ரவரியில் ஆரம்பிக்கப்பட்ட 1000 கிலோமீற்றர் கிராமப்புற வீதிகள் திட்டத்தின் கீழ் 320 கிலோமீற்றர் கிராமப்புற வீதிகள் பூர்த்தி செய்யப்பட்டு எஞ்சிய தொகையை ஆகஸ்ட் மாதத்தில் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மக்கள் தொகை கணக்கெடுப்பு – தகவல் சேகரிப்பு நாளை முதல் ஆரம்பம்

15வது மக்கள் தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பில் தனிநபர் மற்றும் வீட்டுத் தகவல் சேகரிப்பு நடவடிக்கை நாளை (07)...

இலங்கை சிறையில் இருந்த 56 பாகிஸ்தானியர்கள் இன்று விடுவிப்பு

இலங்கையில் பல வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த 56 பாகிஸ்தானியர்கள் இன்று பாகிஸ்தானுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதன்படி, கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த...

அநுராதபுரம் முதல் மஹவ ரயில் சேவையை முன்னெடுப்பதில் தாமதம்

வடக்கு ரயில் மார்க்கத்தின் அநுராதபுரம் முதல் மஹவ வரையிலான ரயில் பாதையின் திருத்தப்பணிகள் மேலும் தாமதமாகும் என ரயில்வே...