கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரயில் சேவை வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் ஏற்பட்ட மின்சாரத் தடை காரணமாக கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரயில் சேவைகளில் இன்று மதியம் தாமதம் ஏற்பட்டிருந்தது.
மின்சாரத் தடை காரணமாக ரயில் சமிக்ஞைகளில் ஏற்பட்டுள்ள செயலிழப்பு காரணமாகவே குறித்த ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டிருந்ததாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.