follow the truth

follow the truth

July, 4, 2024
Homeஉலகம்பைடன் ஜனாதிபதி வேட்பாளராக இருந்து விலகும் அழுத்தத்தில்

பைடன் ஜனாதிபதி வேட்பாளராக இருந்து விலகும் அழுத்தத்தில்

Published on

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடவுள்ள தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனின் ஜனாதிபதித் தேர்தல் போராட்டம் நிச்சயமற்றதாக உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன

பைடனுக்கும் அவரை எதிர்த்துப் போட்டியிடவுள்ள குடியரசுக் கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்புக்கும் இடையே நடந்த முதல் விவாதத்தில் ஜனாதிபதி பைடன் காட்டிய பலவீனம் மற்றும் தோல்வியால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விவாதத்தை CNT தொலைக்காட்சி சேனல் ஏற்பாடு செய்தது.

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த கருத்துக்களுக்கு பதிலளிக்கையில் ஜனாதிபதி ஒன்றுக்கு ஒன்று முரணாக பதிலளித்ததாகவும் பெரும்பாலும் ட்ரம்பை அவமதிப்பதிலேயே அவர் குறியாக இருந்தார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

பைடனுக்கு தற்போது 81 வயது, டிரம்பிற்கு 78 வயது இதன்படி, ஜனாதிபதி பைடனுக்குப் பதிலாக வேறொரு வேட்பாளரை நியமிப்பது குறித்து ஜனநாயகக் கட்சியினர் ஏற்கனவே கவனம் செலுத்தி வருவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எவ்வாறாயினும், ஜனாதிபதித் தேர்தல் களத்திற்கு வேறொரு வேட்பாளரை நியமிப்பது அவ்வளவு இலகுவானதல்ல என்றும் கூறப்படுகிறது. அதன்படி, ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களால் பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளரான பைடன் இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறங்குவார் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஜனநாயகக் கட்சியில் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கு தற்போது நடைமுறையில் உள்ள தொகுதி முறையே முதன்மையாக ஏற்படுத்தப்படும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

உதாரணமாக, 1968 ஆம் ஆண்டில், ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள் தங்கள் ஜனாதிபதி வேட்பாளராக அப்போதைய ஜனாதிபதி லிண்டன் ஜான்சனுக்குப் பதிலாக துணை ஜனாதிபதி ஹூபர்ட் ஹம்ப்ரியின் பெயரை முன்மொழிந்தனர்.

“ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஜனாதிபதி ஜான்சனுக்கு மக்கள் ஆதரவு இல்லாததாலும், வியட்நாம் போருக்கு எதிரான போராட்டங்களாலும், ஜனநாயகக் கட்சியினர் அவரை ஜனாதிபதி தேர்தலில் இருந்து நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக துணை அதிபரை நியமிக்க முடிவு செய்தனர். ஆனால் அது 60களில். இன்று , இது வித்தியாசமானது.”

எவ்வாறாயினும், ஜனநாயகக் கட்சியின் அடுத்த மாநாடு வரும் ஆகஸ்ட் மாதம் சிகாகோவில் நடைபெற உள்ளது.

இதன்படி ஜனாதிபதி போட்டியில் இருந்து விலகிக் கொண்டால் அவருக்கு பதிலாக யார் நிற்பார் என்பது தொடர்பில் ஜனநாயக கட்சியில் தற்போது அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் மீது நம்பிக்கை இருப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் கூறுகின்றன. இருப்பினும், அந்த நியமனம் குறித்து கட்சிக்குள் விமர்சனங்கள் எழுந்துள்ளன, பைடன் மற்றும் டிரம்ப் இடையேயான இரண்டாவது விவாதம் செப்டம்பர் 10 ஆம் திகதி நடைபெற உள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 5ஆம் திகதி நடைபெறவுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

விவாத மேடையில் கிட்டத்தட்ட தூங்கிவிட்டேன் – ஜோ பைடன் விளக்கம்

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடனான விவாதத்தின்போது தான் தூங்கிவிட்டதாக ஜோ பைடன் விளக்கம் அளித்துள்ளார். அமெரிக்க அதிபர்...

குழந்தை திருமணத்தை தடை செய்த நாடு

மேற்கு ஆபிரிக்க நாடான சியரா லியோன் நாட்டில் (Sierra Leone) குழந்தை திருமணத்தை தடை செய்யும் புதிய சட்டம்...

பைடனை தொடர்ந்து ஜனாதிபதி வரம் கமலாவுக்கு வாய்க்குமா?

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில் ஜநாயகக் கட்சி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி...