follow the truth

follow the truth

April, 20, 2025
Homeஉள்நாடுகிராமத்தில் போதைப்பொருளை ஒழிக்கும் நடவடிக்கை கிராம அதிகாரிகளுக்கு

கிராமத்தில் போதைப்பொருளை ஒழிக்கும் நடவடிக்கை கிராம அதிகாரிகளுக்கு

Published on

போதைப்பொருள் வலையமைப்பை முறியடிக்கும் நடவடிக்கைக்காக கிராம சேவைக் களங்களில் போதைக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை குறித்து அறிக்கை தயாரிக்க பொலிஸ் பிரிவு மட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிராம அதிகாரிகளையும் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் உத்தரவிட்டுள்ளார்.

பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் பிரதேச மட்டத்திலுள்ள கிராம உத்தியோகத்தர்களை தொடர்பு கொண்டு இந்த அறிக்கையை தயாரிப்பது பொலிஸ் பிரிவுகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் குறிக்கோள், அறிக்கையின் மூலம் அடையாளம் காணப்பட்ட போதைக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வுக்கு அனுப்புவதும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் போதைப்பொருள் விற்பனை செய்யக்கூடிய சந்தையை உடைப்பதும் ஆகும்.

மேல்மாகாணத்தில் கொழும்பை அண்மித்த பகுதிகளில் நூறு வீடுகள் கணக்கெடுக்கப்பட்டால் குறைந்தது ஐம்பது போதைக்கு அடிமையானவர்களாவது கண்டுபிடிக்கப்பட வேண்டும் எனவும், ஆனால் கடந்த 6 மாதங்களில் வெறும் மூன்று வீதமே காணப்படுவதாகவும் பொலிஸ் மா அதிபர் சிரேஷ்ட அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டியுள்ளார். ‘யுக்திய’ நடவடிக்கையின் மூலம் மேல் மாகாணத்தில் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும் என்றும், இதனால் போதைப்பொருள் வலையமைப்பின் சந்தையை உடைக்க முடியாது.

கடந்த ஆறு மாதங்களில், ஒன்பது மாகாணங்களில் ‘யுக்திய’ நடவடிக்கைகளின் மூலம் 184,862 போதைப்பொருள் தொடர்பான சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்களில் 5565 பேர் புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளின் 6வது ஆண்டு நிறைவையிட்டு முஸ்லிம் அமைப்புகளின் கூட்டு அறிக்கை

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த துயரமான ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவங்களின் ஆறு ஆண்டுகளை இன்று...

கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை

உயிர்த்த ஞாயிறு அன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு,...

ட்ரம்பின் பரஸ்பர வரி : அமெரிக்கா பறந்தது இலங்கை தூதுக்குழு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் அண்மையில் விதிக்கப்பட்ட வரிகள் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட இலங்கையின் தூதுக்குழு ஒன்று அமெரிக்காவிற்கு...