follow the truth

follow the truth

September, 19, 2024
HomeTOP1நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் குறைக்கப்படும்

நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் குறைக்கப்படும்

Published on

இன்று (30) நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் குறைக்கப்படும் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தேசிய பேருந்து கட்டணக் கொள்கையின் பிரகாரம் அமுல்படுத்தப்படும் என சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்தார்.

பேருந்து கட்டணம் 5.27% குறைக்கப்படும் எனவும் இதன் காரணமாக குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 30 ரூபாவில் இருந்து 28 ரூபாவாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“மக்களிடம் நாங்கள் ஒரு சிறப்பு வேண்டுகோள் ஒன்றினை முன்வைக்கிறோம். இன்று நள்ளிரவு முதல் அரசு தரப்பு கூறும் விதத்தில் டீசல் விலை குறையுமாயின் பேரூந்து கட்டணமும் குறையும். பேருந்துக் கட்டணக் குறைப்பின் பயனை 100% பயணிகள் பெற வேண்டுமானால், அவர்கள் சில்லறைப் பணத்தை கொண்டு வர வேண்டும். இல்லையெனில், 30 ரூபாயாக இருந்த பேருந்துக் கட்டணம் 28 ரூபாய்க்கு மாற்றப்பட்டாலும் பிரச்சினைகள் எழும். பின்னர் இந்த இரண்டு ரூபாய் பிரச்சினை இருக்கும், மேலும் ஒவ்வொரு கட்டணத்திலும், இந்த இரண்டு, மூன்று மற்றும் ஐந்து ரூபாய் போன்ற நாணயங்களை மாற்றுவதில் சிக்கல் இருக்க வாய்ப்புள்ளது..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையின் வௌிநாட்டு தனியார் கடன் வழங்குநர்களுடன் கடன் மறுசீரமைப்பிற்கு கொள்கை ரீதியில் இணக்கம்

2023 ஆம் ஆண்டு இறுதியில் காணப்பட்ட இலங்கையின் 17.5 டொலர் பில்லியன் தனியார் வணிகக் கடன் மறுசீரமைப்பு தொடர்பிலான...

ஜனாதிபதி தலைமையில் கூடிய தேசிய பாதுகாப்பு சபை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் தேசிய பாதுகாப்பு சபை இன்று (19) ஜனாதிபதி செயலகத்தில் கூடியது. நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின்...

02 நாட்களுக்கு மதுபான சாலைகளை மூட தீர்மானம்

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாக கலால்...