follow the truth

follow the truth

October, 6, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாவங்குரோத்தான நாட்டில் உண்மையைப் பேச வேண்டும்.

வங்குரோத்தான நாட்டில் உண்மையைப் பேச வேண்டும்.

Published on

நமது நாடு வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டு விட்டதாக நாட்டினை ஆள்பவர் தவறான கற்பிதங்களை தெரிவித்து வருகின்றார். நாட்டை ஆள்பவருக்குக் கூட இது குறித்த சரியான புரிதலும், நிபந்தனைகள் குறித்த தகவல்களும் தெரியாது. நாட்டை ஆள்பவர்களால் அல்லது மக்களால் வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டு விட்டோம் என தீர்மானித்து அறிவிப்புக்களை விடுக்க முடியாது.

சர்வதேச நிதி மதிப்பீட்டகங்கள், அங்கீகரிக்கப்பட்ட சுயாதீன நிறுவனங்களே உரிய மதிப்பீடுகளின் பிரகாரம் அறிவிப்பை விடுக்கும். இந்நிறுவனங்கள் அறிவியல், இலக்க மற்றும் தரவுகளை மையமாக வைத்து, நிதித்துறையின் பொருளாதார பின்னணி எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் கண்டறிந்து, அதன் நேர்மறை மற்றும் எதிர்மறை அம்சங்களை ஒப்பிட்டாய்ந்து, வங்குரோத்து நிலையிலிருந்து வெளிவந்து விட்டதா? இல்லையா? என்பதை முடிவு செய்யும்.

உண்மையான தரவுகளை நாட்டுக்கு வழங்க முடியாத ஒரு தலைமைத்துவம் இருக்கும் போது, ​​நாட்டுக்கு பொய் சொல்லி, நாட்டை ஆள்பவர்கள் தொடர்ந்தும் ஆட்சியில் இருக்க அனுமதி வழங்குவதா இல்லையா என்பதை குடிமக்களே தீர்மானிக்க வேண்டும். வங்குரோத்தான நாட்டில் உண்மையைப் பேச வேண்டும். உண்மை நிலை தெரிய வேண்டும். தந்திரமான அரசியல் முடிச்சுக்களைக் கையாண்டு தமது இருக்கையை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரே எண்ணப்பாட்டில் இருக்காது, இந்தப் பயணத்தின் ஒரே நோக்கம் 220 இலட்சம் மக்களின் வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றுவதாக இருக்க வேண்டும்.

இந்த தூய நோக்கத்துடன் தேசிய நிகழ்ச்சி நிரல் வகுக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சுதந்திர கட்சி கூட்டணியாக சிலிண்டர் சின்னத்தில் களமிறங்க தீர்மானம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) நிமல் சிறிபால டி சில்வா அணி எதிர்வரும் பொதுத் தேர்தலில் எரிவாயு சிலிண்டர்...

“எனக்குக் கொடுக்கப்பட்ட கார் தினமும் உடையும்.. RBS வெடிக்கும்” Landcruiser v8 குறித்து டயானா கருத்து

தான் இராஜாங்க அமைச்சராக இருந்த போது ஜனாதிபதி செயலகத்தினால் வழங்கப்பட்ட வாகனம் மிகவும் பழுதடைந்திருந்ததாக முன்னாள் இராஜாங்க அமைச்சர்...

லால் காந்தவின் கருத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தி பதில்

கே. டி.லால் காந்த பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தி வெளியிட்ட கருத்து குறித்து ஐக்கிய மக்கள் சக்தி அறிவிப்பு ஒன்றினை...