follow the truth

follow the truth

October, 5, 2024
Homeவிளையாட்டுஅரையிறுதியில் தென்னாபிரிக்கா அணி

அரையிறுதியில் தென்னாபிரிக்கா அணி

Published on

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் சுப்பர் எட்டு சுற்றின் தீர்க்கமான போட்டியொன்று இன்று (24) இடம்பெற்றது.

இது தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையில் இடம்பெற்றது. குறித்த போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 135 ஓட்டங்களைப் பெற்றது.

கைல் மியர்ஸ் 35 ஓட்டங்களும் ரோஸ்டன் சேஸ் 42 பந்துகளில் 52 ஓட்டங்களும் எடுத்திருந்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணிக்கு 2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 15 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது மழையால் ஆட்டம் தடைபட்டது.

இதனையடுத்து டக்வொர்த் மற்றும் லூயிஸ் முறைப்படி தென்னாப்பிரிக்காவின் இலக்கு 17 ஓவர்களில் 123 ஓட்டங்களாக மாற்றப்பட்டது.

அவ்வப்போது விக்கெட்டுகளை இழந்தாலும், 17வது ஓவரின் முதல் பந்தில் மார்கோ ஜான்சனின் 6 ஓட்டங்களுடன் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.

அதன்படி, தென்னாப்பிரிக்கா அரையிறுதிக்குத் தகுதி பெற்றதால், மேற்கிந்தியத் தீவுகள் போட்டியிலிருந்து வெளியேறியது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்தியாவை சொந்த மண்ணில் வீழ்த்துவது கனவில்தான் நடக்கும் – ரமீஸ் ராஜா

இந்திய கிரிக்கெட் அணி, பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் தொடரை (2-0) முழுமையாக கைப்பற்றியது. கான்பூரில் நடந்த கடைசி டெஸ்டின் முதல்...

முதல் போட்டியிலேயே இலங்கையை வீழ்த்தியது பாகிஸ்தான்

ஐசிசி மகளிர் T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 31 ஓட்டங்களால்...

மகளிர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணம் இன்று

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ( ஐ.சி.சி.) மகளிர் இருபதுக்கு 20 உலகக் கிண்ண போட்டியை 2009-ம் ஆண்டு அறிமுகம்...