follow the truth

follow the truth

April, 9, 2025
HomeTOP2பொஹட்டுவயில் இருந்து வெளியேற்றப்படும் விஜயதாச ராஜபக்ஷ

பொஹட்டுவயில் இருந்து வெளியேற்றப்படும் விஜயதாச ராஜபக்ஷ

Published on

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து நீக்குவதற்கு கட்சி தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று (24ம் திகதி) இடம்பெறவுள்ள அக்கட்சியின் அகில இலங்கை செயற்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.

விஜயதாச ராஜபக்ஷ கொழும்பு மாவட்டத்தில் பொதுஜன பெரமுனவில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினரானார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியினை விஜயதாச ராஜபக்ஷ அண்மையில் பொறுப்பேற்றமையால் இந்த கேள்வி அண்மைக்காலமாக இழுத்தடிக்கப்பட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து நீக்கப்பட்டால் ஜனாதிபதியுடன் இணைய வாய்ப்புக்கள் உள்ளதாகவும் அரசியல் உள்ளக செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வெலிக்கடை பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞனின் உடலை தோண்டி எடுக்குமாறு உத்தரவு

அண்மையில் வெலிக்கடை பொலிஸ் காவலில் இருந்தபோது உயிரிழந்த இளைஞனின் உடலை தோண்டி எடுத்து, மூன்று விசேட வைத்தியர்கள் கொண்ட...

தேர்தல் சட்டத்தை மீறிய 13 வேட்பாளர்கள் கைது

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரை 13 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2025 உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தேர்தல்...

பராட்டே சட்டம் தொடர்பான சலுகை காலம் நீடிப்பு

கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடைந்த பராட்டே சட்ட அமுலாக்கத் தடை, நீடிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சு வெளியிட்ட அறிக்கையில்...