follow the truth

follow the truth

July, 8, 2024
HomeTOP2பியூமியின் 19 வங்கிக் கணக்குகளின் பதிவுகளை வரவழைக்க உத்தரவு

பியூமியின் 19 வங்கிக் கணக்குகளின் பதிவுகளை வரவழைக்க உத்தரவு

Published on

திட்டமிட்ட குற்றச் செயல்கள் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான சொத்துக்களை வெளிப்படுத்தாத வகையில் சம்பாதித்ததாகக் கூறப்படும் மொடலான பியூமி ஹன்சமாலியின் நாட்டின் 08 முன்னணி வங்கிகளால் பராமரிக்கப்படும் 19 கணக்குகளின் பதிவுகளை வரவழைக்க மாளிகாகந்த நீதவான் மஞ்சுள திலகரத்ன இரகசியப் பொலிஸாருக்கு அனுமதி வழங்கினார்.

இரகசியப் பொலிஸின் சட்ட விரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் மூலம் பெறப்பட்ட சொத்துக்களின் கோரிக்கைக்கு அமைய, கீழ்க்கண்ட உத்தரவுகள் வங்கிப் பதிவுகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

என்னில் இருந்து நாடு வரை அமைப்பின் தலைவர் சஞ்சய் மஹவத்த செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் சம்பத் ராஜகருணா மற்றும் பிரதிப் பொலிஸ் பரிசோதகர் தரங்க லக்மால் ஆகியோர் நீதிமன்றில் உண்மைகளை முன்வைத்தனர்.

கொழும்பு ஹில்டன் குடியிருப்பில் வசிக்கும் பியுமி ஹன்ஸ்மாலி 800 இலட்சம்  ரூபாவுக்கு ரேஞ்ச் ரோவர் காரை வாங்கி, கொழும்பில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் 148 மில்லியன் ரூபாய் பெறுமதியான வீட்டை வாங்கி, எட்டு பெரிய வங்கிகளில் பராமரிக்கப்பட்டு வந்த 19 வங்கி கணக்குகள் மூலம் கோடிக்கணக்கான பணத்தை குறுகிய காலத்தில் டெபாசிட் செய்துள்ளார்.

2011 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் திருத்தப்பட்ட பணமோசடிச் சட்டத்தின் 6 ஆம் இலக்கத்தின் கீழ் இந்த விசாரணை நடத்தப்பட்டு, இரகசியப் பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட உண்மைகளைப் பரிசீலித்த நீதவான், வங்கிக் கணக்குப் பதிவேடுகளை சமர்பிக்க பொலிஸாருக்கு அனுமதியளித்து, அவர்களிடம் சமர்ப்பிக்குமாறு கூறினார்.

LATEST NEWS

MORE ARTICLES

அதுருகிரிய துப்பாக்கிச் சூடு – சந்தேக நபர்கள் தப்பிச் சென்ற வேன் கண்டுபிடிப்பு

அதுருகிரிய துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட சந்தேகிக்கப்படும் வேன் ஒன்று புலத்சிங்கள பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று (08) மாலை 119...

மின் கட்டணம் 30% குறைக்க தீர்மானம்

மின்சார கட்டணம் 30 வீதத்தால் குறைக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இது எதிர்வரும்...

மேலும் 14 துறைகளுக்கு வரி அறவீடு செய்ய தீர்மானம்

இதுவரையில் கவனம் செலுத்தாத 14 துறைகளில் வரி அறவீடு செய்ய தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய...