follow the truth

follow the truth

April, 19, 2025
HomeTOP2பலத்த பாதுகாப்பு : இந்தியா - பாகிஸ்தான் போட்டி இன்று

பலத்த பாதுகாப்பு : இந்தியா – பாகிஸ்தான் போட்டி இன்று

Published on

T 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய-பாகிஸ்தான் அணிகள் மோதும் குரூப் ஏ பிரிவு போட்டி இன்று நியுயோர்க்கில் நடைபெறவுள்ளது.

இப்போட்டியை முன்னிட்டு நியூயோர்க்கில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரு அணிகளும் இடம்பெற்றுள்ள குரூப் ஏ பிரிவில் அமெரிக்கா 2 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்தியா ஒரு வெற்றியுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இதேவேளை போட்டி நடைபெறும்போது காலநிலை சீராக இருக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. ஆனால் மழை பெய்து ஆட்டத்தில் முடிவு கிட்டாமல் போனால் அது இந்தியாவுக்கு சாதகமாக அமைவதுடன் ஐக்கிய அமெரிக்காவுடன் சுப்பர் ஓவரில் தோல்வி அடைந்த பாகிஸ்தானுக்கு பாதகமாக அமையும்.

இந்தியா: ரோஹித் ஷர்மா (தலைவர்), விராத் கோஹ்லி, ரிஷாப் பான்ட், சூரியகுமார் யாதவ், ஷிவம் டுபே, ஹார்திக் பாண்டியா, ரவிந்த்ர ஜடேஜா, அக்சார் பட்டேல், ஜஸ்ப்ரிட் பும்ரா, அர்ஷ்தீப் சிங், மொஹமத் சிராஜ்.

பாகிஸ்தான்: மொஹமத் ரிஸ்வான், பாபர் அஸாம் (தலைவர்), உஸ்மான் கான், பக்கார் ஸமான், ஷதாப் கான், இப்திகார் அஹ்மத், இமாத் வசிம், ஷஹீன் ஷா அப்றிடி, நசீம் ஷா, மொஹமத் ஆமிர், ஹரிஸ் ரவூப்.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூடு

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் பாதிப்பு இல்லை எனவும் சம்பவம் தொடர்பில் மன்னம்பிட்டிய...

பிள்ளையானின் சாரதி CIDயால் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனின் சாரதியைக் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று கைது செய்துள்ளனர். பேராசிரியர்...

பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க CIDயில் முறைப்பாடு

நிதி பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார். தன்னையும் தனது மகளையும் பற்றிச்...